Posts

Showing posts from December, 2024

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்". *2025 "*

                                                                                  * HAPPY NEW YEAR.2025 *                          " இல்லத்திலும் உள்ளத்திலும்    மகிழ்வும்"...                                 "சொந்தத்திலும் பந்தத்திலும்   உறவும்" ..                                "அன்பர்கள் நண்பர்களிடத்தில் நட்பும்"...                                            "அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அன்பும்"...        ...

பாசம்

2024 ஆம் வருட....ஐப்பசி மாதம் முடிய இருப்பதால்... மூன்று நாட்களுக்கு முன் ...சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள மீன் மார்கெட் சென்று இருந்தேன்... ஐப்பசி மாதம் முடிவதற்கும்...மீன் மார்க்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்...         கார்த்திகையில். அசைவம் தொடுவதில்லை.......கார்த்திகை மாதம் மகா அண்ணாமலையார்...தீபம் ஏற்றும் மாதம்... இந்த கார்த்திகை முதல் நாளில் இருந்தே வீடுகளில் விளக்கேற்றி அண்ணாமலையாரை "அரோகரா.  அரோகரா.  "என்று நெஞ்சுருகி. ... பக்திப் பரவசத்துடன்.. மெய்மறந்து.... ஒவ்வொரு நிமிடமும்... ஒவ்வொரு நாளும்...இந்த மாதம் முழுக்க...வீட்டுப் பெண்கள்.  .ஒரு தெய்வீக உலகத்துக்கே சென்று விடுவார்கள்...                                     இந்த நேரத்தில் மீன் கடை ஏன் நியாபகத்திற்கு வருகிறது என்றால்....?..                             கார்த்திகை முதல் நாளில்.. ஶ்ரீ மஹா ஐயப்பன் அருள் முகம் காண....மகர ஜோத...

தாத்தா

1972 ஆம் ஆண்டு...மேட்டூர் அணை வைத்தீஸ்வரா  உயர்நிலைப் பள்ளியில் எழாவது படிக்கும்போது...ஒரு வாரத்துக்கும் மேலாக... "சோ..." வென்று....வானத்துக்கும் பூமிக்கும் நூல் இழைகளை கட்டித் தொங்க விட்டது போல...தொடர்ந்து....கொட்டிக் கொண்டே இருந்த மழைக் காலத்தில்....மேற்கே மறைந்த சூரியன்...தொலைந்து போய் விட்டதோ என்று தேடும் சூழலில்...நீல வானம்....அதில் நீந்தும் மேகங்கள்...அதன் உடைகளை உடனுக்குடன் மாற்றி...உடல் அழகை ஒய்யாரமாக... வளைந்து நெளிந்து அழகு காட்டி ஒரு நிமிடத்தில் மறைந்து....மீண்டும் வேறு ஒரு உரு வத்தில் அழகைக் காட்டும் காட்சிகள் எங்கும் காணோம்..இரவில் அண்ணார்ந்துப் பார்த்தால்..கண் சிமிட்டி பார்த்து கண்ணடிக்கும் கயல் விழிகளைக் வலை வீசி தேடினாலும்.... தென்பட வில்லை... சில்லென்றக் காற்று.... சிறிது சிறிதாக சிதறி விழும் மழைத்துளியு டன்...கார்த்திகை மாதத்தில் கரம் பிடித்து...தமிழகத்தில் உள் நுழையும் வடகிழக்கு பருவ மழை....                இந்த மழை காலத்தில் தான்...கையில் ஒரு காக்கி துணிப் பையுடன்.... டரக்.. புரக்...என்ற.  டயர் செருப்பு சத்தத்துடன்... ...

யார் அந்த திருடன்

.... அப்பா ...21 ஆண்டுகள் military service செய்தபிறகு. ..,1968ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்று தன் வீடு உள்ள...சேலம்.. ஆண்டிபட்டிக்கு திரும்பினார்...இரண்டொரு மாதங்களில்...இந்த பசு வீடு வந்து சேர்ந்தது...இது  சிந்து மாடு ...பஞ்சாப்பில் இருந்து...இரயில் மூலமாக...சேலம் வந்து எங்கள்... வீட்டிற்கு வந்தது...அப்போது அதை வரவேற்கும் வயது எனக்கு வரவில்லை...சுமார் எட்டு அடி நீளம் இருக்கும்...ஒன்றறைக்கு இரண்டு அடி size ல் முகம் இருக்கும்...அகலம்... மூன்று அடி இருக்கும்... செம்மை நிறத்தில் இருக்கும்.... பெரிய பெரிய கண்கள்...கண்களுக்கு....கண்மை தீட்டியது போல இருக்கும்...பால் மடி மிகப் பெரியதாக இருக்கும்.... பால் காலையில்...இருபது லிட்டர்...மாலையில் பதினைந்து லிட்டர் கறக்கும்......பால் கறந்து முடிக்க...அப்பாவும்...அம்மாவும்...  .களைத்துப் போய் விடுவார்கள்...காலையில் பால் கற ந்ததும் ...ஒரு டம்ளர் பால்.... வெத வெத என்று இருக்கும்...எனக்கு கொடுத்து குடிக்கச் சொல்லுவார்கள்.... "தம் "கட்டி குடித்து விடுவேன்...பால் வாடை என் வாயில் அடிக்கும்....பின்னர்...அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு.... குழந்தைகளுக்கு...

ஓசை

....  1968 ஆம் ஆண்டில் நான் மூன்றாம் வகுப்பு ... சேலம் ....போடிநாயக்கன் பட்டியில் படித்த போது...மாலையில் என் சகோதரிகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்...வழக்கம் போல அப்பா...வாசலில்...பச்சை சோள தட்டு களை ஒரு கட்டை மேல் வைத்து ஒரு ஜான் அளவில் துண்டு துண்டுகளாக வெட்டி...விரல் size அளவில் வளைத்து கட்டி செய்து இருந்த          மூங்கிலில் ஆன தீவன grate ல் போட்டுக் கொண்டு இருந்தார்... புத்தகப்பையை உள் வீட்டின் சுவர் ஓரமாக வைத்து விட்டு...வெளியே புறக்கடை ஓரம் இருந்த சிமெண்ட் தொட்டியில் நீர் எடுத்து...இப்பொழுது எல்லாம்...பிளாஸ்டிக் "mug "பயன் படுத்து கிறோம்...அப்போதெல்லாம்....ஒரு லிட்டர் engine oil iron tin ....கடையில் கிடைக்கும்...அதன் திறந்த வாய் பகுதியை தரையில் மாங்கு ...மாங்கு என்று தேய்த்தால் பேத்துக் கொண்டு வரும்...அதை mug ஆக பயன் படுத்து வார்கள்...அதுவும்...ஒரு ஆறு மாதம் தாக்குப் பிடிக்கும்... அப்புறம்....அதே மாதிரி வேற தயார் செய்ய வேண்டும்... ஏனென்றால்... துரு  ஏறி அடியில் சிறு சிறு ஓட்டைகள் விழுந்து விடும்...அதில் தண்ணீர் தொட்டியில் இருந்து நீரை மொண்டு தலைக்கு...

நொறுக்குத்தீனி

 அப்படி கெட்டியான  சோன் பப்டி சாப்பிட்ட ஓர் அனுபவம்...ஒரு நாள் மாலை நேரம்...பெங்களூரு சந்திப்பில் இருந்து....மெஜஸ்டிக் பேருந்து நிலையம் செல்லும் மேல் பாலம் மீது மெதுவாக சென்று... எதிரே இருக்கும் கடை வீதியில்... மூலையில்...முன் இருக்கும் கரும்புச் சாறு விற்க்கும் கடையில்.. நாங்கள் விரும்பும் வகையில் ... ஒரு டம்ளர் ...ஐஸ் கலக்காத...கரும்புச் சாறு டோக்கன் பெற்று... வரிசையில் நின்று வாங்கிக் குடித்து விட்டு.. மீண்டும் பெங்களூரு சந்திப்பு இடது புறம் இருக்கும்... தங்குமிடத்திற்க்கு திரும்புவது அன்றாட வழக்கம் ...அப்படி  வரும் போது....நண்பர் மாதவன் ... கோவையை சேர்ந்தவர்...எதிரே தள்ளு வண்டியில் விற்ற சோன்பப்டி வாங்கி என்னையும்  சாப்பிடச் சொன்னார்...இப்பொழுதுதான்...இஞ்சி .. எலுமிச்சை கலந்த கரும்பு சாறு உதடு ஒட்ட க்குடித்து ..அதன் இனிப்பு இன்னும் வாயில் தித்தித்துக் கொண்டு இருக்கும் போது....இன்னொரு இனிப்பு. .எதற்கு...  எனக்கு   சோன்பப்டி சாப்பிட  ஆர்வம் இல்லை ..அதனால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு சோன்பப்டி பாக்கெட்டுக...

முதல் சம்பந்தி

என் பெரியம்மா...அம்மாவின் அக்கா... சின்ன குயிலி...பெரியப்பா..குட்டிக்கார பெருமாள் ஆகிய இருவரும் செம்மாண்டப் பட்டியில் இருந்து...ஒரு ஞாயிறு காலையில் வீட்டிற்கு வந்தார்கள்...வாசலில் கட்டி இருந்த சிந்து மாட்டையும், வெள்ளைப் பசுவையும் பார்த்து விட்டு...வானம் பார்த்த  வெறும்  தரையில் கட்டி வைத்து இருக்கிறீர்களே....வெய்யல் ...மழை வந்தா மாடுங்க தாங்காதே என்று...அப்பாவிடம் சொன்னார்கள்....அப்போது. ...நாங்கள்.... பெரியம்மா கொண்டு வந்து இருந்த....பலகாரங்களை தின்று கொண்டிருந்தோம்...எப்பொழுது வந்தாலும்...கடலைக் காய்...குச்சிக்கிழங்கு...பனங்கிழங்கு.... சீத்தாப்பழம்... எழந்தைப் பழம் ...கொய்யாக்காய்... கோணப் புளியங்காய்...கொ டுக்காப்புளி.முருங்கைக்காய்...இவைகளோடு...பலகாரம் ஆகிய தீனிகளை கொண்டு வருவார்கள்... எப்பொழுதும்..  வெறும்  கையோடு வந்ததில்லை... ஆனால் இந்த முறை ...இந்த தின்பண்டங்களோடு...ஒரு சில. . அங்கும் இங்குமான கரும்புள்ளிகளை முதுகிலும்...முன் நெற்றியிலும் கொண்ட வெள்ளை நிறப் பூனை ஒன்றும்...அதனோடு வெளுப்பும் சிகப்பும் கலந்த நிறத்தில் முட்டை இடும் பருவத்தில் ஒரு பெட்டைக் கோழியு...

தொல்லை

 நேற்று IOB பேங்கிற்கு சென்று இருந்தேன்... ஸ்லீப் கொடுத்து விட்டு பேங்க் மேனேஜர் chamber க்கு முன்னால் இருந்த டேபிள் மீது இருந்த ஹிந்து நாளிதழ் கண்ணில் படவே... ச்சேரில் அமர்ந்து...பேப்பரை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்...என் அருகில் வந்து அமர்ந்த . .என்னை விட  வயதான ஒருவர்...என் முகத்தையும்... படிக்கும்                         பேப்பரையும் மாறி மாறிப் பார்த்தார்..நான் அவரைப் பார்க்கும் பொழுது சினேகமாக...புன்னகைத்தார்.  அவர் முகம் குழந்தை சிரிப்பதுப் போல இருந்ததால்.. நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்... உடனே...தம்பி... கொஞ்சம் பேனா தரமுடியுமா என்று கை நீட்டினார்.  என்னை யாராவது.. அண்ணா என்றோ..தம்பி என்றோ அழைத்தால்.  .... பாசத்தில் விழுந்து விடுவேன் ...ஏனென்றால்...என் பெற்றோருக்கு நான் ஒரே ஆண் பிள்ளை...எனக்கு ஐந்து சகோதரிகள்... அண்ணனோ..தம்பியோ பிறக்க வில்லை.. எனக்கு அது ஒரு குறை...குறை தான்.....மேலும்.... அவரை  மேலும்  கீழும் பார்த்தேன்...வெள்ளை அரைக் கை ராம்ராஜ் cotton shirt... அதே காட்டன் வேஷ்...

நண்பர் கிரிதரன்....

 மிக்க நன்றி கிரி...நல்வழி காட்டியதிற்கு க்கு...மீண்டும் நன்றி...🙏🙏🙏🙏🙏