நாராயணி கண்ணகி.
ஜோலார்பேட்டை இரயில் சந்திப்பில்.. நடை மேடையில்... ஹிக்கிம் பாதம்ஸ் புத்தகக் கடையில் ..அவரை ..முதன் முதலாக .. அந்தக் கடைக்காரர் திரு.அன்பு அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் கைக் குலுக்கி முகம் மலர அறிமுகம் ஆனோம். என்னைப் பற்றி விசாரித்தார்.என் எழுத்துக்கள் பற்றி விசாரித்தவர் ..பாராட்டியதோடு... நீங்கள் மத்திய அரசுப் பணியில் இருப்பதால் உங்கள் படைப்புகளை நிதானமாக நேரம் எடுத்து உருவாக்கலாம். அவைகள் சிறப்பாக வரும். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது.. காரணம் பகல் முழுக்க.. வெப்பம்.. அனல்.. சூடு.. புகை இவைகளோடு உட்கார்ந்துக் கொண்டு தங்க நகை செய்தல்.. இரவு நேரத்தில் எழுதுதல்... இந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லை.நிதானமாக படைப்புகளை உருவாக்குங்கள் என்று வாழ்த்தினார்.அவருடன் அவரின் இலக்கிய நண்பர் திரு.இளபரிதியும் இருந்தார்.....