Posts

Showing posts from January, 2025

மகிழ்வான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....2025

**...பொங்கல் மட்டுமா பொங்கி வருகிறது**.                               ..புறப்படும் எண்ணங்களை... புறந்தள்ளிய உண்மைகளை... புதைந்துப் போன வரலாறுகளை... புரட்சியான நிகழ்வுகளை... புதுமையின்  வரவால் ...மறந்து போன...மறைந்து போன...பழக்கங்களை....வழக்கங்களை...மீட்டெடுத்து...மீண்டும் மனதுக்கு ..அமைதியை..நிறைவை....பெருமையை .. மகிழ்வைப் பெற..... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை... நேரிடையாகச் சொல்வோம்...பொங்கல் வாழ்த்து அட்டைகள் மூலம் சொல்வோம்.. ஃபோன் மூலமாக சொல்வோம்...காகிதத்தில் எழுதி அனுப்புவோம்...வாசலில் கோலமிட்டு தெரிவிப்போம்...தித்திக்கும் கறும்பும் ..நெய்மணக்கும் பொங்கலும்... பொங்கி எழும் மகிழ்வும்.....இல்லத்திலும்..உள்ளத்திலும்...நிரம்பட்டும்....                       "சேலம் வசந்த் "                               மற்றும் குடும்பத்தினர்....

ஆத்மா

1980 ஆம் வருடம்...திருச்சி SIT யில் இரண்டாம் வருடம் Mechanical Engineering படித்தப்பொழுது...Annual day  முடிந்தப் பிறகு...பொங்கல் பண்டிகையின் விடுமுறையும் சேர்ந்துக் கொண்டதால்....ஒரு ஆறு நாள் கல்லூரி விடுமுறை...அந்த விடுமுறையில்.....                              இந்த ஜனவரி மாதக் குளிரில்...மலைகளின் ராணி....ராணி..ராஜக்குமாரி... என்றாலே....அழகான...அமைப்பான உடலோடு..அங்கமெல்லாம் தங்கமாக...தங்கமே நிறமாக... இப்படியே வர்ணிக்கும்...தொடர்ச்சியாக....ஒவ்வொருவருடைய., மனதையும் வசீகரிக்கும் வனப்பு நங்கையாக... கண்ணுக்குக் குளிர்ச்சியாக...கவர்ந்து இழுக்கும் காந்தக் கன்னியாக விளங்கும்... ஊட்டி என்கிற நீலகிரி சென்று இருந்தேன்.                                  ஈரோட்டில் காலை 8.20 க்கு அரசு பஸ் பிடித்து உட்கார்ந்தால் 12.30 க்கு ஊட்டி வந்துவிடும்....                           ...

நிரந்தரமில்லை

ஆசிரியர்...அவர் ஒரு நல்ல ஆசிரியர்....மேட்டூர் சேலம் கேம்ப்.  ல் உள்ள பிரிசித்திப் பெற்ற தனியார் பள்ளியில்...ஆசிரியர் பணி செய்துக் கொண்டே... "ஒலி & ஒளி" அமைப்பதில் ...புகழ் பெற்ற "சாமி சவுண்ட் சிஸ்டம்"  -சேலம்   கேம்ப்.   ..என்ற அமைப்பை. . பட்டித் தொட்டி எங்கும் பரபரப்பாக நடத்தி வந்தவர்..திருமண நிகழ்ச்சி... நாட்டிய நிகழ்ச்சி...சொற்பொழிவு.....பிரபல அரசியல் தலைவர்களின்.  அரசியல் கூட்டம்... மாநாடு  என்றால்...அந்த அளவுக்கு.... ஒலி & ஒலி  mike setting அமைப்பதில் வல்லவர்....           அவரின் தம்பிதான் நம் கேசவன். . கீழ் மேட்டூர் ICH இந்தியன் சர்க்யூட் ஹவுஸ்  To குஞ்சாண்டியூர் வரை சென்றுத் திரும்பும்   ஶ்ரீ ராமுலு பஸ்சில்... அரைக்கால் நிக்கருடன் வெள்ளை அரைக்கை சட்டையுடன்.. நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து...வாயில் வெற்றிலை பாக்குச்   சிவப்புடன் .. சிரித்த முகத்துடன் வருவோரையும்... போவோரையும் கிண்டல் அடித்துக் கொண்டு  கூட்டதை சேர்த்துக் கொண்டு...நல்ல வசூலில்... பஸ்சை    ஓட...

ஆடிப் பெருக்கு

 ஆடிப் பெருக்கு.. ஆடிப் பதினெட்டு.... பத்தாம் மாத கர்ப்பிணிப் பெண் போல.... நிறைவுக் கொண்டு... பூரிப்புக் கொண்டு...தமிழகத்தின்... வாழ்வாதாரத்தின் தாய் .. பொன்னி நதி... பொங்கி ஓடும் ஓசை வானை முட்டுகிறது....                                  தினமும் காலையில். ..,ராஜூ , ஜெகன் சங்கர் கோபு என்கின்ற மைசூர் கோபு, தேவராஜ் என்கின்ற ராமகிருஷ்ணன்,ரவீந்திரன் ,குணசேகரன் மற்றும் பல நண்பர்களுடன் காவேரி  ஆற்றில் நீந்தி குளித்து விட்டுத் தான் VHSS பள்ளிக்கு வருவோம்....                 ஆண்டு முழுக்க காலையில் காவேரி ஆற்றில் குளிக்கும் நாங்கள்...ஆடி பதினெட்டு அன்றும்  ஆடி இருபத்தெட்டு  அன்றும் காவிரி ஆற்றில் குளிக்க மாட்டோம்...     வீட்டில் .. அருகன் புல்லோடு ஐந்து எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து காலை உணவு முடித்து, வெளியே கிளம்பி விடுவோம்..                          ...

தாடி

1977 ஆம் ஆண்டு...பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என் bench ல் அமரும் நண்பன் ஒருவர்,ஒரு பெயரின் ஆரம்ப வார்த்தையைச் சொல்லி,ஒரு கவிதை எழுதிக் கொடு.. அந்தப் பெண்ணைக் காதலிப்பதுப்போல.. ...இது உன் திறமைக்குச் சவால் என்றார்....                                       பெயரின் முன் வார்த்தை கவிதை எழுத  ஏதுவாக இருந்ததால்... எழுதிக் கொடுத்தேன்..ஆனால்  அந்தக் கவிதை என்னுடையது அல்ல..              கொஞ்ச நாட்களுக்குப்  பிறகு . seience மாஸ்டர்...திரு.சந்திரசேகரன் சார்...என்னை LAB க்கு வரச் சொன்னதாக.  Office Assistant... அவர் ஒரு தாத்தா... நன்றாக பாடுவார்...என்னிடம் சொன்னார்....Lab க்குச் சென்றப் பொழுது ... அங்கே,சந்திரசேகரன் சார், சேலம் பாலு சார்.  மற்றும்  பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் ...மரியாதைக்குரிய சார், கர...கர..குரலில் பேசுவார்...பெயர் நினைவுக்கு வரவில்லை...நின்றுக் கொண்டு இருந்தனர்... மூவரும் என்னை முறைத்துப் பார்த்தனர்... சந்திரசேகர...

துணை

1975 ம் ஆண்டு.. மேட்டூர் அணை..VHSS ல் ஒன்பதாவது படிக்கும்போது... வகுப்பு ஆசிரியர் திரு. சேலத்து பாலு sir...தமிழ் ஆசிரியர் புலவர் திரு. மாதவன் sir .   ஆகியோர் ....       அரையாண்டு. தேர்வு முடிந்து...விடுமுறை கழிந்து  ..மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்த போது .. அந்தந்த பாடப் பிரிவு ஆசிரியரும்... மாணவர் பெயரைச் சொல்லி...முதல் mark...இரண்டாம் mark... மூன்றாம் mark என்று விடைத் தாளை கொடுத்து பாராட்டுவார்கள்.... அப்படி... தமிழ் விடைத்தாள் கொடுக்கும் போது..நண்பர்...             ரகுராமன்.. முதல் mark...வகுப்பில் கைத்தட்டல்.... இரண்டாவது......நான் .....   வகுப்பில் கைத்தட்டல்... ஆனால்...மாதவன் sir ... என் திருத்திய தமிழ் பரிட்ஷைத் தாளை. எனக்கு கொடுக்காமல்..தன் கையிலேயே வைத்துக் கொண்டு...அந்த அரையாண்டு தேர்வின் தமிழ் வினாத் தாளை என்னிடம் காட்டி...என்ன கேள்வி கேட்டு இருக்கு...        நீ என்ன பதில் எழுதி இருக்கிறாய்  என்று...கீழ் உதட்டைப் பிதுக்கி ... முகத்தை... கடுமையாக வைத்துக் கொண்டார்.. சிரித...