Posts

நெஞ்சில் முள்

சமீபகாலமாக அந்த விளம்பரத்தை... தொலைக் காட்சியின் ஒரு சில வினாடிகளில் வரும் விளம்பரங்களில் ..அடிக்கடி காண முடிகிறது .... அந்த விளம்பரத்தின் இயற்கை காட்சியும் அதில் நடிப்பவரையும் ...குரலின் வசீகரத் தன்மையும்  ...நெஞ்சைக் கவர்ந்து இழுக்கும் இசையும் .. அட...டா.நம்மையே ஆட்கொண்டு விடும்.....                                              லைஃப் பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்...   ஆரோக்கியம் இருக்குமிடம்..லைஃப் பாய் இருக்குமிடம்...                           இந்த விளம்பர இசை ...               இன்று எழுபது வரைத்  தொட்ட இதயங்களில்  மறக்க முடியாத பதிவாய் எழுந்து ....எழுந்து இசைப் படிக்கும்..                                            ...

முதுமையில் தவிப்பு

ஆசிரியர் திரு.நாகப்பன் ...சித்தப்பாவை எனக்கு மற்ற சித்தப்பாக்களைப் போலவே சில விசயங்களில் ரொம்பப் பிடிக்கும்.இவர் என் மூன்றாவது சித்தப்பா..சென்னை நந்தனம் டக்கர் பாபா பயிற்சிப் பள்ளியில் படித்தவர்.பாப்பிரெட்டிபட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.சேலத்தில் இருந்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய சென்றவர் அங்கேயே நிலம் வாங்கி வீடு கட்டி தன் வாழ்நாளை          செய்வனே கடத்தியவர் .மகன் சங்கர்.... லண்டனில் பணிபுரிவதால்..... குடும்பத்தோடு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில்  வசித்து வருகிறார். மகள்  ஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.      இவரது கணவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்.                              நாகப்பன் சித்தப்பாவை நான் சந்திக்கும் நிகழ்வுகள் ஒரு சில வினாடிகள்..அல்லது ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும் ...அந்த நேரத்தில் ஒரு சில விசயங்களைச் சொல்லி என் மனதை கவர்ந்து விடுவார் ..     ...

ராகம்

திறமையின் வெளிப்பாடு அதன் உச்சம் தொடும்போது தான் தெரியும்..                                 திறமையின் வெளிப்பாடு..தொடர் முயற்சியினால் ...பயிற்சியினால் வெற்றி பெருகிறதா என்றால்...அது இயற்கைத் தந்த வரம் என்றேச் சொல்லலாம்..                                   அப்படி ஆளுமை கொள்ளும் திறமை அவரின் வாரிசுகளுக்கும் வரும் என்று உறுதி படுத்த முடியாது.                        அரசாங்கப் பதவி என்றாலும் .. அறிவியல் துறை என்றாலும்...வணிகத் துறை என்றாலும்..விளையாட்டுத் துறை என்றாலும்... விவசாயம் என்றாலும்.. விண் ஆராய்ச்சி என்றாலும்... சினிமாத் துறை என்றாலும் . இவைகளில் உச்சம் தொட்டவர்களின் வாரிசுகள்....அந்த அளவுக்கு வெற்றிப் பெற முடியவில்லை...    ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் அந்த வாரிசுகளால் தொடர்ந்து வெற்றி பெற முடிவதில்லை..மெல்ல மெல்ல மங்கிப் போய் விடுகி...

மனதில் கனம்

புரட்டாசி மாதம்... புருஷோத்தமன் பெயர் ஒலிக்கும் மாதம்... புலால் உணவு தவிர்த்து...புடலங்காய்...பூசணிக்காய்...வெண்டைக்காய்... வாழைக்காய்... முள்ளங்கி... முருங்கைக்காய் .. என சைவ உணவுக்கு சரியான மாதம்... அசைவத்தை சைவமாகப் புரட்டிப் போடும்  மாதம்.  இந்தப் புரட்டாசியில்..    அருகில் இருக்கும் உழவர் சந்தைக்கு சென்று இருந்தேன்.தேவையான காய்கறிகளை வாங்கி கட்டைப் பைகளில் திணித்தால்...கைகள்     கனம் கொள்கின்றன....பாக்கட்டில் உள்ள பர்ஸில் கை வைத்தால் பணம்குறைந்து போகின்றன ... ஐநூறு  ரூபாய் நோட்டை வெளியே  விட்டால்.. ஐந்து ரூபாய் கூட மீதம் வருவதில்லை... விலை வாசி .. விண்ணைத் தொட்டு வேஷம் போட்டு ஆடுகிறது ...வாங்குவதை வாங்கி ....இரண்டு கைகளில் கனக்கும் பைகளை தூக்கிக் கொண்டு...சந்தை விட்டு வெளிவந்து.. நிறுத்தி விட்டு வந்த  டூ வீலர் நோக்கி நடக்கும் போது...எனக்குப் பின்னால் இருந்து என்னைக் கூப்பிடுவதுப் போல இருந்தது...நடக்கும் வேகத்தைக் குறைத்து  கவனித்தால்....என் பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள்... நின்று திரும்பிப் பார்க்கையில்....எழுந்து வரும் உதயனி...