மனதில் கனம்

புரட்டாசி மாதம்... புருஷோத்தமன் பெயர் ஒலிக்கும் மாதம்... புலால் உணவு தவிர்த்து...புடலங்காய்...பூசணிக்காய்...வெண்டைக்காய்... வாழைக்காய்... முள்ளங்கி... முருங்கைக்காய் .. என சைவ உணவுக்கு சரியான மாதம்... அசைவத்தை சைவமாகப் புரட்டிப் போடும்  மாதம்.  இந்தப் புரட்டாசியில்..    அருகில் இருக்கும் உழவர் சந்தைக்கு சென்று இருந்தேன்.தேவையான காய்கறிகளை வாங்கி கட்டைப் பைகளில் திணித்தால்...கைகள்     கனம் கொள்கின்றன....பாக்கட்டில் உள்ள பர்ஸில் கை வைத்தால் பணம்குறைந்து போகின்றன ... ஐநூறு  ரூபாய் நோட்டை வெளியே  விட்டால்.. ஐந்து ரூபாய் கூட மீதம் வருவதில்லை... விலை வாசி .. விண்ணைத் தொட்டு வேஷம் போட்டு ஆடுகிறது ...வாங்குவதை வாங்கி ....இரண்டு கைகளில் கனக்கும் பைகளை தூக்கிக் கொண்டு...சந்தை விட்டு வெளிவந்து.. நிறுத்தி விட்டு வந்த  டூ வீலர் நோக்கி நடக்கும் போது...எனக்குப் பின்னால் இருந்து என்னைக் கூப்பிடுவதுப் போல இருந்தது...நடக்கும் வேகத்தைக் குறைத்து  கவனித்தால்....என் பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள்... நின்று திரும்பிப் பார்க்கையில்....எழுந்து வரும் உதயனின் எதிர் ஒளி ....நெற்றியில் படும் வெப்பத்தைக் கூட தாங்க முடியாமல்...குடைப் பிடித்துக் கொண்டு... என்னையே ஆவலுடன் பார்க்கும்...அவர்.... உற்று பார்க்கிறேன்....அவர்...வலது கையில் குடை....இடது கையை... தாங்கிப் பிடித்து  நிற்பவர் ...தலை வாரி கொண்டை போடாமல்...வெறுமனே கோதி கோடாலி முடிச்சுப் போட்டு...ஒரு சாதா நைட்டியை அணிந்து.... கழுத்தைச் சுற்றி ஒரு பழையத் துண்டு தொங்க விட்டபடி..அவர் துணைவியார் தான் சந்தேகமில்லை...இருவரும் என்னையே கண் சிமிட்டாமல்...என் வரவை.... எதிர்ப் பார்த்துக் கொண்டு நின்றனர்...      கைகளில்        பாரத்தோடு இருந்த நான் கோபத்தோடு அவர்கள் அருகில் சென்றேன்....நீங்க "வசந்த் "தானே...ஆமாம்.... உற்றுக் கவனித்தேன்....அவர் சேலம் கேம்ப் ராஜ்குமார்  ...ஒரு வருட சீனியர்...VHSS... மேட்டூர் அணை பள்ளியில் படித்தவர்.. சேலம் கேம்ப் பில் இருந்து வந்து ...படித்த அந்த மூன்று குமார்களான...சாந்தகுமார்....சந்திரக் குமார்... ராஜக்குமார்... என்ற ..சேலம் கேம்ப் குரூப் தான்...நான் ராஜகுமாரை நன்றாகவே  அடையாளம் கண்டுக் கொண்டேன்... எப்பொழுது இந்தியா land       ஆனிங்க...வினவினேன்.. அவர் மெல்லச் சிரிக்க முயன்றார் .... இவருக்கு ..கருநீலக் கண்ணனைப் போல...நீண்ட உருவம்... சின்சியராக....படிக்கக் கூடியவர்..அதிகமாக யாருடனும் பேசமாட்டார்.தான் ஒரு கெட்டிக் காரன் என்பதில் அவருக்கு அப்பொழுதே நல்ல நம்பிக்கை உண்டு .நலம் விசாரித்தேன்... காய்ந்து போன உதடுகளுடன்... சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்... என்னைப்  பார்த்துக் கொண்டு இருந்தாரே   தவிற... பதிலேதும் பேசவில்லை....அவர் துணைவியார்  தான் பதில் சொன்னார்...அவருக்கு உடம்பு சரியில்லை...போன வருடமே அபுதாபியில் இருந்து வந்துட்டார்....என்ன. ... உடம்புக்கு என்று...அவரைப் பார்த்தேன்... ராஜ்குமார் மெல்லக்  குனிந்து தன் இரண்டு கால் பாதகங்களையும் பார்த்தார்...நானும் பார்த்தேன்...கருத்து வீங்கிப் போய் இருந்தன... முகத்தைப் பார்த்தேன்....அவர் கண்களில் நீர் கலங்கின ... நோய்ப் பற்றியும்.... மருத்துவ ட்ரீட்மெண்ட்  பற்றியும் அவர் துணைவியார்...எடுத்துச் சொன்னார்.... அவருடைய இளம் பருவத்து உருவம் என் நினைவிற்க்கு வந்தது...என்ன ஒரு சுறு                    சுறுப்பானவர்... என்ன ஒரு ஸ்டைலாக வருவார்.... படித்து முன்னேற வேண்டும் என்று நேரத்தை பொன்னெனக் கருதி படித்தவர்...வகுப்பில் முதல் ஐந்து ரேங்க் கில் வருபவர்..கருத்த முகத்தில் வெள்ளைப் பவுடர் வாசனையோடு வருபவர்.  இன்று .... காய்ந்துப் போன கருவாடாக......... உடல நல்லாப் பாத்துக்குங்க  என்று ...ஆறுதல் சொல்லி விட்டு ..குனிந்து என் காய்கறி பைகளை தூக்க  முயன்ற போது....அவரிடம்....  இன்னும் கொஞ்சம் நேரம் பேசுங்கள்.... எங்களை விட நண்பர்கள் பேசினால்...அவருக்கு கொஞ்சம் relax ஆக இருக்கிறது...என்று... கைக் கூப்பி வேண்டிக் கொண்டார் அவர் துணைவியார்.... ராஜ்குமார் ...மெது மெதுவாக....தான் செய்த வேலைப் பற்றியும்...சம்பாதித்த...வருமானம் பற்றியும்.உண்ட உணவு முறையையும் ..காலநிலையின் தாக்கத்தினையும்..தேவையான ஓய்வுப் பெறாத உழைப்பு பற்றியும்.இவைகளால்....உடம்பு பாதிக்கப்பட்ட விசயத்தையும்...ஒவ்வொன்றாகச் சொல்லி....வேதனைப் பட்டுக் கொண்டார்...அவரின் ஒவ்வொரு வார்த்தையும்...        வெளிவர...ஒரு  யுகம் போல எனக்கு  இருந்தது...அவருக்கு ஆறுதலாக..மனதுக்கு தைரியமாக  இருக்கட்டுமே என்று ...அவருடைய...பள்ளி பருவத்து...நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன்.அவருக்கு..அது ..அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை ஏற்ப படுத்தியது.....இப்படித் தாங்க...தினம் காலையில் இவரை...இந்த உழவர் சந்தைக்கு அழைத்து வந்து...இங்குள்ளவர்களை யாரையாவது காண்பிக்கும் போது..சற்று...free. ஆகிறார்...இன்று அவரோட...ஸ்கூல்மேட் உங்களைப்.  பார்த்ததும்...அவருக்கு...ரொம்ப மகிழ்ச்சி ...இந்த உழவர் சந்தைக்கு பின்னால் தான்..         எங்கள் வீடு...இரண்டாவது..தெரு...வீட்டுக்கு வாங்க...என்று... அவர் துணைவியார் வேண்டிக் கொண்டார்...அவரோடு நீங்கள் பேசிக் கொண்டு இருந்தால்..அவருக்கு ஒரு தெம்பு... என்று..இருக்கை கூப்பினார்.   நான் அவர் சீக்கிரம் நலம் பெற இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு.... விடைப் பெற்றேன்...வீடு நோக்கி போகும் போது..... முப்பத்தை ந்து   ஆண்டுகளுக்கு முன்னால்...தற்போது குடியிருக்கும் அவர்களின் வீட்டின் வாசல் முன்...ராஜ்குமார்... ஜீன்ஸ் பேண்ட்... டீ ஷர்ட்...அணிந்து நின்றுக் கொண்டு இருந்தார்... உழவர் சந்தைக்கு தெற்கே உள்ள அந்தப் பகுதி...1990 க்குப் பின்னர் தான் ஒவ்வொரு வீடாக...உருவானது...என் வீட்டில் இருந்து சேலம் junction வந்து இரயில் பிடிக்க...அவர் குடியிருப்பு வழியாகத்தான் செல்வேன்...அப்படி போகும் போது தான் இராஜகுமாரை அடையாளம் கண்டு...அவர் வீட்டு முன் சைக்கிளை நிறுத்தினேன்...ஸ்கூல் மேட் என்ற மகிழ்வில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்...அவரும் தான்...வெளிநாட்டில்..அபுதாபியில்...பணி புரிவதாகவும்...... அவர் அப்பா 1985 யில் மேட்டூர் பியர்ட்செல் கம்பெனியை  மூடியப் பிறகு இங்கே சேலம் சூரமங்கலம் உழவர் சந்தைக்கு பின்னே..அந்த பிளாட் வாங்கியதாகவும்... அதில் இப்போது...வீடு கட்டி..மனைவியுடன்...வசிப்பதாகவும்.பெருமையோடு ... மகிழ்ச்சியுடன் சொன்னார்.... சொல்லி முடிக்கக் கூட இல்லை...வீட்டின் ஹாலில் இருந்து...யாருங்க அது. ..என்று அவரின் துணைவியாரின் குரல் சப்தமாகக்...கேட்டது...என் ஸ்கூல்மேட் என்றார் ராஜ்குமார்...உடனே...உள்ளே வாங்க...என்று ராஜ்குமாரின்... துணைவியார் அழைத்தார்.. வீட்டு  வாலில் சைக்கிலுடன் நின்றுக் கொண்டு இருந்த என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல்...வேகமாக...உள்ளேச் சென்று விட்டார் ராஜ்குமார்...பள்ளிப் படிப்பை முடித்து நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய நண்பனை பார்த்து...ஒரு குதூகலத்துடன்...  பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர் துணைவியார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டது...என் மனதுக்கு..அவமானமாகவும்...முகத்தில் அறைந்தது போலவும் ... ச்சே ...என்று பாரமாகவும்...இருந்தது...இன்று... தன் கணவனின்  உடல் நிலை சரியில்லை என்கிறபோது...அவர் வீட்டிற்கு வந்து அவரோடு சற்று பேசுங்கள்...நண்பர்கள் ..பேசினால் அவருக்கு...ஒரு ஆறுதலாக இருக்கும்..அவரின் மனதில் மலர்ச்சி தோன்றும்  என்று...ராஜ்குமாரின் துணைவியார கெஞ்சும் பார்வையோடு...கை கூப்பி அழைக்கிறார்... என்ன செய்வது....என் மனத்தில் கனக்கும்  அவமானப் பட்ட அந்தப் பாரத்தை இறக்கி வைப்பதா...இல்லை என் கைகளில்  கனக்கும் உழவர் சந்தை காய்கறிகளின்  பாரத்தை இறக்கி வைப்பதா...,"சேலம் வசந்த்" 

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.