நெஞ்சில் முள்

சமீபகாலமாக அந்த விளம்பரத்தை... தொலைக் காட்சியின் ஒரு சில வினாடிகளில் வரும் விளம்பரங்களில் ..அடிக்கடி காண முடிகிறது .... அந்த விளம்பரத்தின் இயற்கை காட்சியும் அதில் நடிப்பவரையும் ...குரலின் வசீகரத் தன்மையும்  ...நெஞ்சைக் கவர்ந்து இழுக்கும் இசையும் .. அட...டா.நம்மையே ஆட்கொண்டு விடும்.....                                              லைஃப் பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்...   ஆரோக்கியம் இருக்குமிடம்..லைஃப் பாய் இருக்குமிடம்...                           இந்த விளம்பர இசை ...               இன்று எழுபது வரைத்  தொட்ட இதயங்களில்  மறக்க முடியாத பதிவாய் எழுந்து ....எழுந்து இசைப் படிக்கும்..                                                இந்த லைஃப் பாய் சோப்பு சிகப்பு நிறத்தில் செவ்வக வடிவில் கைக்கு அடக்கமாக இருக்கும்...                         ஏரி ..குளம் ..குட்டை..அருவி.... ஓடை..கிணறு..ஆறு...நதி... மழை நீர் என்று ...எந்த நீரானாலும்...உப்புக் கலந்த நீர் என்றாலும்...உடம்பில் சோப்பைத் தடவும் போதே ... நுரை எகிறி மூக்கில்...முகத்தில் அடித்து...கண்களை முழுதும்  மூடி ..வழிந்து... வான வில்லின் அந்த ஏழு வண்ணங்களை கண்களின் முன்னே மிதக்க விடும்..                           கண்களில் சோப்பு நீர் இறங்கினாலும்...அவ்வளவுக்கு கண்கள் எரியாது....  எரிச்சல் தாங்கிக் கொள்ளும் அளவுதான் இருக்கும்..அந்த சோப்பின் வாசனை குளித்து மணிக்கணக்காக இருந்தாலும்...உடம்பில் மணந்துக் கொண்டுதான் இருக்கும்..வெள்ளை வெள்ளையாக உடலில் ஒட்டாது..சுத்தமாக நீரில் கரைந்து ஓடிவிடும்.. குளித்தப் பிறகு குளுமையாகவும்...உடல் சுத்தமாகவும்...கொஞ்சம் கலர் வந்தது போல  கருப்பு உடலுக்கு  மினு மினுப்பாய்த் தெரியும்..  ...கொஞ்சம் கலர்... கருப்பு உடலுக்கு வருகிறது என்றாலே  மனம் ஒரு மகிழ்வான துள்ளலை அனுபவிக்கும்.
..இந்த சோப்பின் அளவு மூணு...இரண்டு..ஒன்றரை அங்குல அளவில் இருக்கும்.. இனிக்கும் தின்பண்டம் என நினைத்து ..சிறுவர்கள் இந்தச் சோப்பை எடுத்துக் கடித்து விடுவார்கள்...கசக்கும் சுவை உணர்ந்து ..முகம் சுளித்து துப்புவார்கள்..கடித்த சோப்பு பள்ளில் ஒட்டிக் கொள்ளும் .அதை நோண்டி எடுக்கும் போது...விரலில் வழுக்கி.. வழுக்கி ..ஓடும் ..நீர் விட்டு கொப்பளித்தால்..வாய் முழுக்க நுரை பொங்கி நிறைந்து  வரும்...வாயை சுத்தம் செய்வதற்குள் ... பெரும்பாடு படுத்தி விடும்...                                                   இந்த சோப் தான் பெரும் பாலான வீடுகளின் நம்பிக்கை நாயகன்... சுத்தம்...சுகாதாரத்தில் துணைவன்..      இருந்தாலும் வீட்டுப் பெண்கள் இந்த சோப்பின் மணத்தை விரும்புவதில்லை ..  .ஆண்களுக்கு பிடித்துப் போன இதன் மணம் பெண்களை கவர வில்லை..காரணம்.. இதில் வரும் ஒருவித இரசாயன வாடை.     ...மேலும்  ....இந்த சோப்பின் விளம்பரத்தில் ... லிரில் சோப்பின் விளம்பரத்தில் வரும் ... நீர்வீழ்ச்சி .. துள்ளலான இசை..  இயற்க்கை சூழல்...அதில் குளிக்கும் அழகிய  இளம் பெண்போல இல்லாமல் ...கட்டுமஸ்தான உடல் கொண்ட ஆண் நடித்ததால் ..பெண்களின் மனதைக் கவரவில்லையோ என்னவோ.... மாறாக ... மைசூர் சந்தன சோப் ..இதன் வாசனை பெண்களை மிகவும்    கவர்ந்து விட்டது. பெண்களும் சிறுவர்களும் மைசூர் சந்தன சோப்பை குளிக்க பயன் படுத்துவதால் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு சோப்பு டப்பாக்கள்     இருக்கும் ...ஆண்களுக்கு லைஃப் பாய் சோப்..பெண்களுக்கு மைசூர் சந்தன சோப் ...சந்தன சோப்பை      சும்மா சொல்லக் கூடாது ...வீடு முழுக்க வாசனையை சுழல விட்டுக் கொண்டு இருக்கும் ..இதற்க்கு நடுவில் தேவைக்கு ஏற்றார் போல .... சந்திரிகா ஆயூர்வேதிக் சோப்..அப்பப்போ வந்துப் போகும். ...முதுகில்  ...கன்னத்தில் காதுக் கருகில்  வெண் தேமல்...விரல் இடுக்கில்    அரிப்பு....இவைகளுக்கு டாக்டர்கள் எழுதி தரும் மருந்து..நிவாரணி இந்தச் சந்திரிகா சோப் தான்.. இந்த சோப் இரண்டு.......ஒன்றரை...ஒன்று என்ற அங்குல அளவில் இருக்கும்...இதன் மேல் கவரை பிரித்துப் பார்த்தால்...கரும் பச்சை நிறத்தில் சோப்பு இருக்கும்..ஒரு மூலிகை வாசம் வரும். இரண்டு..நான்கு முறை இதன் வாசனையை நுகர்ந்தால் ஒருவித மயக்கம் வருவதுப் போல இருக்கும்.  உள்ளே  நான்கு  ..ஐந்து.. மடிப்பாக மெல்லியக் காகிதத்தில் அச்சிடப்பட்ட ...இந்த சோப்பை  எவ்வாறு பயன் படுத்துவது என்ற வழி காட்டல் இருக்கும்..அதன் எழுத்து..     +4.5     பவர் கண்ணாடி போட்டுப் பார்த்தால் கூட படிக்க முடியாது. அவ்வளவு சிறியதாக இருக்கும்....இந்தச் சோப்பை.. பொது இடங்களில் குளிக்கும் போது பயன் படுத்த வெட்டகப் படுவார்கள்.ஏனென்றால் இந்தச்  சோப்பை... தனித்துவமாக நோய்க் கிருமிகள் அண்டாதிருக்க பயன் படுத்துவார்கள். இந்தச் சோப்பின் நுரையில் ஒரு ஐந்து  நிமிடம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.இந்தச்  சோப்பிற்கு அடுத்து ...மெடிமிக்ஸ் சோப்  ...இது முற்றிலும் மருத்துவ மனைகளில் பயன் படுத்தப் படும்.  .இவைகளோடு.... ரெக்ஸ்சோனா ...சிந்தால்....  லிரில் ...லக்ஸ் போன்ற சினிமா நட்சத்திரங்கள் பயன் படுத்தும் சோப்புகளும் உண்டு....ஆனால் அவைகளை ஒரு முறை வாங்கி பயன் படுத்தி விட்டு மறு முறை வாங்க மாட்டார்கள்..விலை இரண்டு...மூன்று மடங்கு அதிகம்....அதிக வாசனை... சுவாச அலர்ஜி தோன்றும்.குளித்தப் பிறகு....உடலில் வெள்ளையாக பவுடர் தடவியதுப் போல ஒட்டிக் கொள்ளும்.     ......           வீட்டில்  இந்த சிகப்பு நிற லைஃப்பாய் சோப் வைக்கும்..இடத்தில் .. அதே மூன்று..இரண்டு ....ஒண்ணரை அங்குல அளவில்...அதே  சிகப்பு நிறத்தில் ... ஐயாயிரம்  வார்த்தைகள் கொண்ட இங்கிலீஷ்..தமிழ்... டிக்ஸ்னரி ஒன்றையும்  வைத்து ...தெரியாத ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தெரிவதற்கு  எடுத்துப் பார்த்து கொள்ள பயன் படுத்துவோம் .      இதில் எது லைஃப் பாய் சோப் ..எது டிக்ஸ்னரி   என்று வித்தியாசம் தெரியாது..இரண்டும் ஒன்று போலவேத் தெரியும்.இதைத் தொட்டு  அதை  எடுத்து ...அதைத் தொட்டு  இதை  எடுத்து  .. இப்படி மாற்றி மாற்றி எடுப்பதினால்  இரண்டிலும் சோப்பு வாசனை அடிக்கும். எதைத் தொட்டாலும் தொட்டப் பிறகு கையில்  வாசம் வராமல் போகாது.....              1983 ல்..மே மாத துவக்கத்தில்..+2 தேர்வு எழுதி விட்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக ..சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ..S4...பிடித்து...தாரமங்கலம் வந்து...அங்கிருந்து...S8 பிடித்து.  மேட்டூர் RS வந்து எங்கள் வீட்டிற்க்கு .. ஐம்பது பைசா.... ஐம்பது பைசா... ஆக மொத்தம் ஒரு ரூபாய் பஸ் சார்ஜில்.  (அப்போது சேலம் to மேட்டூருக்கு பஸ் சார்ஜ்..Rs.03.50/- ).கெமிக்கல்ஸ் காலனிக்கு வந்து சேர்ந்தார் என் தம்பி.ரவீந்திரன்...இவர் என் இரண்டாவது சித்தப்பா..திரு.              மாதப்பன்... போர்மன்...அரசு மத்திய ஆட்டோமொபைல் வொர்க் ஷாப் ஹஸ்தம்பட்டி...சேலம் ...அவர்களின் இரண்டாவது  புதல்வன்.                             நானும் அப்போது... இரயில்வே சர்வீஸ் கமிஷன் பாஸ் செய்து...  மெடிக்கல் தேர்வு ஆகி வேலைக்கான ஆர்டர்க்காக காத்துக் கொண்டு இருந்தேன்.அப்போது தம்பி ரவி வந்தது எனக்கு தேவையான ஒன்றாக இருந்தது...அப்பாவும் அம்மாவும்..... தங்கைகள்.. தனுசா வும் ... வேணியும் மகிழ்ந்து போனார்கள்.அந்த நாட்களில் அண்ணன் செல்வகுமார் ...மட்டும் தான்..எங்களின் வீட்டிற்க்கு அடிக்கடி வந்துப் போவார்.பெரும்பாலும் ஞாயிறு விடுமுறை நாட்களில்  வீட்டிற்கு வருவார்.மதியத்தில் அம்மா செய்திருக்கும் பிரத்தியேக அசைவ உணவு...நாங்கள் விரும்பி உண்ணும் உணவாக சுவைக்கும். ..பிறகு....வீட்டில் இருக்கும்  நெல்கோ டிரான்சிஸ்டரில் பாடல்கள் கேட்போம்..நாலரை மணியில் இருந்து.  .ஆறரை மணிவரை  ..இலங்கை வானொலியில் தமிழ் நிகழ்ச்சியில் ஒலிப் பரப்பப் படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்போம்.அதன் முதல் நிகழ்ச்சியில்......விநாயகனே வினைத்  தீர்ப்பவனே. ...  தட்டுங்கள் திறக்கப்படும் ...கேளுங்கள் கொடுக்கப்படும்  ...வேறெங்கு  கிடைக்குமென்பார் .... தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு....போன்ற ..வேற்றுமையில் ஒற்றுமை என்ற   மனிதநேய தத்துவத்தில்..... பாடல்கள்  ஒலிபரப்பப்பட்டு   உள்ளத்தை ஊஞ்சலாட்டும்....பின்னர் டீ குடித்து விட்டு வெளியே கிளம்புவோம்...காவிரி ஆற்றின் பதினாறு கண் கதவுவரைச் சென்று ..செல்வகுமார் அண்ணனை ..கீழ் மேட்டூருக்கு பஸ்  ஏற்றி அனுப்பி வைப்போம்....பிறகு நானும் தம்பி ரவியும் ....அங்கே அருகில் இருக்கும் தடுப்பு சுவர் கற்களின் மீது அமர்ந்துக் கொள்வோம். ஸ்டேன்லி நீர் தேக்கத்தில் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும் அலைகளும் ..நீரை விட்டு மேலே எகிறி விழும்  வெளிச்சி கெண்டை  மீன்களும் ...சில் என்று தவழ்ந்து வந்து தடவிச் செல்லும் தென்றலின் குளுமையும்....வித்தியாசமாக உற்சாகத்தைத் தரும். அருகில் இருக்கும் அரச மரத்தின் காய்ந்த இலைகள் அங்கும் இங்கும் விழுந்து.... தலை மீது மெத்தென விழுவதை கை விரலில் நசுக்கி தூளாக்கி.... வாய் வைத்து ஊதி...அது போய் கீழே தழும்பும் நீரில் விழுவதை ஆவலுடன் பார்ப்போம்...மேலே கொக்குகள் பறந்து செல்வதை பார்க்கும் போது...அந்தி சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களில் நேராகப் குத்தும் .கண்கள் கூசாது..வரிசையாக பறந்து வரும் தட்டான்கள்....திடீரென எண்ணிக்கை அதிகமாகி..அரச மரத்தின் இலைகளுக்கு ஈடாக சுழன்று...விலகிச் செல்லும்.. தட்டான் களின் சத்தம் போனப் பிறகு ... தலைக்கு மேலே வீர்...வீர் என்று பறந்து ஓடும் தேனீக்கள் ....பதினாறு கண் பாலத்தின் பெரிய  இரும்பு கதவின் கவுண்டர் வெயிட்.... சங்கலித்  தொடரின் தூண் வளைவுகளில் கூடு அமைத்து...தேன் செமித்துக் கொண்டு                        இருக்கும்...வெளிச்சம் மங்கி..
.கருமை கவ்வும் நேரத்தில் கண்கள் இருளை உணர ஆரம்பிக்கும். தள்ளு வண்டியில்...டங்..டாங்க் என்று வாணலியின்  விளிம்பில் வேர் கடலை  ...வறுக்கும்  கரண்டியால் அடிக்கும் ...சத்தம்...கொஞ்சம் விழிப்பைத் தரும்..கூம்பு போல ....கிழித்த தினத்தந்தி பேப்பரில் சுருட்டித் தரும் வறுத்த வேர்க் கடலையை வாங்கி ..இரண்டு விரல் நுனியில் தோல் நீக்கி .. மேலேத் தூக்கி ஊதி....வாய்த் திறந்து இரண்டு இரண்டாக தூக்கிப் போட்டு மென்றுத் தின்போம்.பிறகு அந்த கிழிந்த தினசரி பேப்பரில் இருக்கும் அரைக் குறைச் செய்தியை தவறாமல் படிப்போம்.அது பெரும்பாலும் .. சினிமா செய்தியாகவோ ... அரசியலா கவோ.... கொலை..கொள்ளை.....திருட்டு.. கற்பழிப்பு...விபத்து...உயிர்ச் சேதம்.. கன்னித் தீவு படக் கதை. சாணக்கியன் சொல்..விளம்பரம் பற்றியோ இருக்கும்...அதில் ஒரு சில செய்திகள் .. வாய்க்கு அவல்        போட்டதுபோல இருக்கும் .அந்தச் சின்னச் செய்தி எங்களுக்கு...பேசும் பொருளாக அமைந்து விடும். அதைச் சார்ந்து எங்களின் விவாதம் ஆரம்பிக்கும்.எங்களின் பேச்சு ..ஒரு பட்டி மன்றம் போலவும்...கவியரங்கம் ...கருத்தரங்கம்...ஏட்டிக்குப் போட்டி...ஒட்டியும் வெட்டியும்...கடும் விவாதம்...போன்று அமையும்.எங்களின் அருகில் முன் பின் அமர்ந்து இருப்பவர்களும் ...அவர்களின் கருத்துகளையும் எங்களிடம் கலக்க விட்டு ரசிப்பார்கள்...அந்த நேரத்தில் வேர்க்கடலை வியாபாரம் விண்ணை முட்டி விடும் .இருட்டு சூழ்ந்து மேட்டூர் அணை மீதும் ...பதினாறு கண் பாலம் மீதும் மின்  விளக்குகள் ஒளிர ஆரம்பிக்கும்...அவைகளின் வெளிச்சம்...நீரின் அலைகளில் பட்டு வளைந்து... வளைந்து ஆடும்.அவை ஆயிரக் கணக்கில் அலை மீது பட்டு கண்ணுக்குத்  அடங்காத வெளிச்சமாகத் தெரியும்...                               லாரி.. பஸ்     மனிதர்களின் நடமாட்டம் ... சப்தம்...குறையக் குறைய  ..அலைகளின் சளார் .. சளார் என்ற  ஓசை...கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் ...                                                வீட்டிற்க்கு திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகி இருக்கும்.அப்பா இரவுப் பணிக்குச்சென்று இருப்பார்.    அம்மா..இவ்வளவு நேரம்  என்னப்பா   பண்ணிங்க.. இருட்டானா வந்திருங்க ...என்பார்... ..அம்மா தரும் இரவு உணவை உண்டு நானும் தம்பி ரவியும் வீட்டிற்க்கு முன்  இருக்கும் நீண்ட சிமெண்ட் திண்ணையில் அமர்ந்துக் கொள்வோம்..அருகில் இருக்கும் தெரு மின் விளக்கின் வெளிச்சத்தில் அப்படி அமர்வது மிகவும் பிடித்த ஒன்று..அதோடு அந்த இரவில் ...அந்தத் தெருவே அமைதியாக இருக்கும் நேரத்தில் .நாங்கள் டிரான்சிஸ்டரில்  சென்னை வானொலிக்கு .. ..அலை வரிசையில் தேட ஆரம்பிப்போம்...அப்போது. எங்களுக்கு காவலாக இரண்டு மூன்று தெரு நாய்கள் வந்து திண்ணை அருகே படுத்துக்  கொள்ளும்... பத்து மணியில் இருந்து பதினொரு மணி வரை..நீங்கள் கேட்டவை....நிகழ்ச்சி... பழைய பாடல்கள் ஒலி பரப்பப்படும்.அந்த அமைதியான நேரத்தில் ... இரவின் மடியில் . .பழைய பாடல்களை கேட்கக் கேட்க... அப்பாடல்களின் தாலாட்டில்... அப்படியேத் தூங்கி  விடுவோம். விடிய ...விடிய கனவில்லாத...கவலை இல்லாத தூக்கம்...காலையில் அம்மாவின் காப்பியின் வாசம் கண் விழிக்கச் செய்யும்.                  ஒவ்வொரு நாளையும் நாங்கள் ஒரு பயனுள்ளதாக கழிக்க ஆரம்பித்தோம்.            .............அன்று சனிக் கிழமை மாலை செல்வஅண்ணன்   வந்து இருந்தார். கீழ்  மேட்டூரில் இருந்து அந்த கவர்னர் மலை ஏறி நடந்தே வந்ததாகச் சொன்னார்..அவர் பள்ளி இறுதி வகுப்பு முடித்தப் பிறகு வெள்ளை  வேட்டியும் கலர் அரைக் கைச் சட்டை அணிவதையும் விரும்புவார். அப்பொழுது அவர் .. திரு..நடேசன் சித்தப்பா ... ஒர்க்ஸ் இன்ஸ்பெக்டர் ஆகப் பணியாற்றிய..தமிழ் நாடு அரசு.. பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்டில் .. தற்காலிக எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார். தந்தையும் தமையனும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியது எங்களுக்கு பெருமையாக இருந்தது.பல முறை அந்த அலுவலகத்திற்குச் சென்று அண்ணன் செல்வக்குமாருடன் உரையாடிவிட்டு வந்து இருக்கிறேன்....என்னைப் பார்த்ததும் PWD அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எதிர் வரிசையில் இருக்கும் டீ கடையில் வடையும் டீ யும் வாங்கிக் கொடுப்பார்.டீ எப்போதும் ஸ்ட்ராங் ஆகத் தான் குடிப்பார்.எனக்கு ஸ்ட்ராங் டீ கசப்பாகவும்....வயித்தக் கலக்குவதுப் போலவும் இருக்கும்.     ......டீ  குடித்தப்  பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக்குடிப்பேன். சீச்.. சீ ..சீ.இது என்னப் பழக்கம் .. சூடாக டீ குடித்து விட்டு...பச்சத் தண்ணியை குடிப்பது... ஒன்னு...டீ குடிப்பதற்கு முன்னாடியே   தண்ணீர் குடித்து இருக்க வேண்டும்.... இல்ல... டீ  குடித்தப் பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது ......என்று அட்வைஸ் செய்வார்.பிறகு பண்டிகைக் காலங்களில் திரு.நாகராஜன் சித்தப்பா(என் எட்டாவது கடைசி சித்தப்பா.... இவர் தமிழ்நாடு. அரசு அச்சகத்தில் கம்போசகராகப் பணியாற்றியவர்) டிரஸ் எடுக்கும் பொழுது  அண்ணன் செல்வகுமாருக்கும் ஒரு செட் டிரஸ் எடுத்துக் கொடுத்து விடுவார் .அப்படி வாங்கிப் போட்டுக் கொண்ட சட்டையுடன்...1981 ஆம் ஆண்டு நான் திருச்சி SIT யில் இறுதி ஆண்டு படிக்கும்போது என் ஹாஸ்டலுக்கு வந்து இருந்தார் .நான் ஒரு சாம்பல் நிற பாலியஸ்டர் ஷர்ட்டும் அதே நிறத்தில் பேண்ட்டும்.... மெயின் கார்டு கேட்டில் உள்ள எலிகண்ட் டைலரிடம் தைத்துப் போட்டுக் கொண்டு இருந்தேன் .அந்த டிரஸ்சுடன்  நாங்கள் திருச்சி மலைக் கோட்டை சென்று உச்சி பிள்ளையாரை தரிசித்து முக்கியமான இடங்களை பார்த்து ஹாஸ்டல் திரும்பினோம். இரவு ஆகிவிட்டது. ஹாஸ்டலில் சாப்பிட்டு செல்வஅண்ணனை பஸ் ஏற்றி சேலம் அனுப்பி வைத்தேன்.நான் அணிந்து இருந்த அந்த விமல்.... சாம்பல் நிற பாலியஸ்டர் ஷர்ட் தனக்குப் பிடித்து விட்டதாகவும் ..அந்த சட்டையை  தனக்கு தருமாறும் பதிலாக தான் அணிந்திருந்த திரு.நாகராஜன் சித்தப்பா வாங்கிக் கொடுத்த சட்டையை எனக்கு தருவதாகவும் சொல்லி...அவர் சட்டையை கழற்றி கொடுத்து விட்டு..என் சட்டையை போட்டுக் கொண்டு ஊருக்கு கிளம்பி விட்டார். .......அந்த ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவில் ..ஒரு மோனோ ஆக்டிங் ... செல்லாதக் காசு..(படிக்காதவன்).என்றத் தலைப்பில் நடித்து பரிசுப் பெற்றேன்.பரிசு வாங்கும் பொழுது  அண்ணன் செல்வக்குமார் கொடுத்த அந்தச் ஷர்ட் அணிந்துதான் பரிசு வாங்கினேன்.அந்த ஷர்ட் இளம் சிவப்பு நிறத்தில்.. மரங்கள் ...பெரியப் பெரிய அடிப் பாகத்தைக் கொண்டு பரந்த கிளைகளைக் கொண்டு ஷர்ட் முழுக்க இருக்கும்.நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும்...அந்தப் போட்டோ ....ஃப்ரேம் செய்யப் பட்டு இன்னும்  எங்கள் வீட்டில் உள்ளது. .(இதை இங்கு பதிவு செய்வதன் முக்கியம் ...சகோதரத்துவத்தின் ஆழத்தை இளைய சமுதாயம் அறிய வேண்டும் என்பதற்காக....).......அன்று நடந்து  மலை ஏறி வந்த செல்வகுமார் அண்ணனை...அம்மா பரிமாறிய உணவுக்குப் பிறகு......சேலம் கேம்ப் கல்பனா டாக்கீஸ் ல் சினிமா பார்க்க நானும் தம்பி ரவியும் அழைத்துச் சென்றோம்.அங்கு.... சோர் மச்சயே சோர்.... என்ற ஹிந்தி படம் ஓடிக்கொண்டு இருந்தது..விருப்பம் இல்லாததால் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் .அண்ணன் செல்வகுமார் கீழ் மேட்டூருக்கு பஸ் பிடித்துச் சென்றுவிட்டார்........ஒரு வாரம் கழித்து...நானும் தம்பி ரவியும்...ஒரு வாரமாக மனதில் ஊறிக் கொண்டு இருந்த...அண்ணன் செல்வகுமார் மலை ஏறி நடந்தே வந்தார் என்று சொன்னதை... அவர் போலவே....நாமும் செய்வோம் என்று முடிவெடுத்து ...அருகில் இருக்கும் காந்திக் கரடு என்ற அந்த சுல்தான் மலை மீது ஏறி பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தோம்......அன்று விடியும் முன்பே எழுந்து....காலை அத்தியாவசிய வேலைகளை முடித்துக் கொண்டு.... சிற்றுண்டி முடித்து....குடிப்பதற்கு தேவையான குடிநீரை பிளாஸ்டிக் வாட்டர் கேனில் பிடித்துக் கொண்டு....வீட்டிற்கு  ..கிழக்கே . அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ....உயரமான சுல்தான் மலை உச்சிவரை ஏறி ..மலையின் மறுபுறம் இருக்கும் கடல் போன்ற காவிரி நீர் தேகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலில்...தம்பி ரவியும் நானும் அப்பா ....அம்மா..தங்கைகளிடம் விடைப் பெற்று ...நடக்க ஆரம்பித்தோம். எங்கள் வீடு இருக்கும் கெமிக்கல்ஸ் காலனி தாண்டி...காம்பவுண்ட் சுவர் வெளியே இருக்கும் தேசாய் நகர் கடக்கும் போது தான் நாங்கள் உணர்ந்தோம்.. வெறும் கையில் வெளியே வந்தது தப்பு என்று.அந்த ஊரின் தெரு நாய்கள் எங்களை கண்டதும்..பாய்ந்து ஓடி வந்து கடிக்க வந்தன...கையில் தடி...எடுத்து வராதது எவ்வளவு தவறு என்பதை நன்றாகவே நாங்கள் உணர்ந்தோம்...இருவரும் குனிந்து ஏய்.. ஏய்..என்று பயந்து கத்தி கொண்டே.. கற்களை எடுத்தோம்...கடிக்க வரும் நாய்களை அடிக்க கற்களை வீசும் போது...ஏம்பா அந்த நாய்களை அடிக்கறீங்க... என்று அந்தத் தெரு  வாசிகள் எங்களை மிரட்டினார்கள்...நாய்கள் கடிக்க வருது...அதுதான்..........நாய்களை பார்த்துக்கொண்டே நாங்கள் சொன்னோம்..நாய்கள் ஒன்னும் உங்களை கடிக்காது...புது ஆளுக ஊருக்குள்ள வந்தா கொழைக் க்கும்...நீங்கப் பாட்டுக்கு வழியப் பாத்து  போங்க...வளர்கிற நாய்களை அடிக்காதிங்க .. என்றார்கள்.            அந்த நாய்கள் விரட்டுவதை  விட ..நாய்களை வளர்பவர்களின் மிரட்டல் தான் மிக அதிகமாக இருந்தது...இந்த நாய்களின் விரட்டலுகும்..அவைகளை வளர்பவர் களின் மிரட்டலுக்கும் பயந்தவர்களா நாங்கள்... இவர்களுக்கு என்னத் தெரியும்... நாய்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாததா............................................இந்த கெமிக்கல்ஸ் காலனிக்கு குடி வந்த புதிதில்...கழுத்தில் பெல்ட் கட்டிய ஒரு நாய் சைக்கிளில் போவோரையும் வருவோரையும்..தெரு முனையில் இருந்து தெரு முடியும் வரை வாயை திறந்துக் கொண்டு .. விரட்டி... விரட்டி..துரத்திக் கொண்டு வரும். சைக்கிளில் செல்பவர்கள் .. ஐயோ.. ஐயோ என்று கத்திக் கொண்டு வேக வேகமாக பெடலை அழுத்தி ....கடிக்க வரும் காலை மேலேத் தூக்கி பதறிக் கொண்டு ஓட்டி..அப்பாடா..தப்பித்தோம் என்று வேர்க்க...விரு விருக்க தப்பிப் போவார்கள்...சில சமயும் ..நாய் பாய்ந்து வந்து கெண்டைக் காலை கடித்து குதறி விடும்..தனியாக வரும் ஐந்து ஆறு வயது சிறுமிகள்... தலை முடியை வாராமல் வெளியே பயந்துக் கொண்டே வந்தால்...நாய் ஓடி வந்து  புரட்டி புரட்டி கடித்து..போட்டிருக்கும் உடையை பிராண்டி கிழித்து விடும்...பின்னர் நாய்                          வளர்ப்பவர்களிடம் சொன்னால்.... நாயை விட ..வேகமாக கடிக்க வருவார்கள்...வழியில போறவங்க பாத்து தான் போகணும்..நீங்க போறீங்க வரீங்கன்னா..நாங்க நாய் வளர்காம இருக்க முடியுமா..இப்படி ஒரு பெரிய சண்டையே ஆகி விடும்.நாய் வளர்ப்பவர்கள் ...வீட்டுக் காவலுக்கு வளர்க்கலாம்...செல்லப் பிராணியாக வளர்க்கலாம்..நாய்களை வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கலாம்.. வெளியேச் செல்லும் பொழுது ..கழுத்தில் பெல்ட் கட்டி பிடித்துச் செல்லலாம்..எல்லோருக்கும் நல்லது..பாதுகாப்பானது..ஆனால். அதை நாய் வளர்ப்பவர்கள்...புரிந்து கொள்ளாமல்...நீங்கள் பாதுகாப்பாக போங்கள் என்பது.... மனிதரா..மிருகமா ..எது இதில்... என   வினா எழுகிறது.அதோடு...              சிறுவர்களையோ...பெண்களையோ .... பெரியவர்களையோ .. கர்ப்பிணி களையோ நாய் கடித்து விட்டால்...                 எவ்வளவு கஷ்டம்.. ஆன்டி ராபிக்.   வேக்க்ஷின்.  ..எத்தனை ஊசி...தொப்புளைச் சுற்றிப் போட வேண்டும்.... பத்திய  சாப்பாடு...கடித்தது பயித்தியம் பிடித்த நாயா.. அதைக் கவனித்து வைத்தியம் செய்ய வேண்டும்............................அந்த பெல்ட் கட்டிய நாய் அப்படித்தான்..... நானும் நண்பன் குணசேகரனும்  சைக்கிளில் செல்லும்பொழு தெல்லாம் ..எங்கள் வீடு வரை விரட்டி வருவதும் ..வெளியே வீதி முடியும் வரை ஆவ்..ஆவ்...என்று துரத்துவதும் ..தொடர்ந்து பயத்தையே ஏற்படுத்தி  வந்தது ....மேலும் எங்கள் தெரு  வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாகவே இருந்தது.இரண்டொரு பேரையும் கடித்தும் விட்டது..அந்த நாயை வளர்பவன் கந்து வட்டி காரர்...நாய் தொந்தரவு பற்றியும்..நாய் கடித்து விட்டது என்று அவரிடம் சொன்னால்...அவரின் நாய் பற்றிய புகாரை அவர் பெருமையாக எடுத்துக்  கொள்வார்.    போடற சோத்துக்கு நாய் ..நன்றாக செயல்படுது என்று திருப்திபட்டுக் கொள்வார்.வருத்தப் பட மாட்டார்.நாய் கடிப் பட்டவர்கள். ஜி ஹெச்...சென்று ஊசி போட்டுக் கொள்வார்கள்..கந்து வட்டிகாரனிடம் வம்பு எதுக்கு என்று ஒதுங்கிப் போவார்கள்.....................ஆனால் அந்தத் தெரு ..வருத்தம் இல்லா.. வேலை இல்லா பட்டதாரிகள்...சும்மா இருப்பார்களா .......,.நானும் குணாவும் ஒரு ஐடியா செய்தோம். ஞாயிற்றுக் கிழமையில்... தங்கமாபுரி பட்டணம் இறக்கத்தில் வாரம் ஒரு முறை கூடும் சந்தைக்குச் சென்று வாங்க வேண்டியதை வாங்கி..அதில் செய்ய  வேண்டியதை செய்து...அந்த இரவே செய்து முடித்து விட்டோம்..................இரவில் ஆரம்பித்த அந்த பெல்ட் கட்டிய நாயின் வாவ்..வாவ்..என்ற சத்தம்...விடிந்தும் அங்கும் இங்குமாக தெரு முழுக்க கேட்டுக் கொண்டே இருந்தது.கெமிக்கல்ஸ் கம்பனியின் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கொண்டு வந்த தள்ளு வண்டியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் அந்த பெல்ட் கட்டிய நாயை பிடித்து வண்டியில்  ஏற்றிச் சென்றார்கள்...............தெருவே அமைதியாக இருந்தது.நாயின்         உரிமையாளர்.... நீங்க தைரியமான ஆளுங்களா இருந்தா ..என் முன்னாடி அப்படி செஞ்சு இருக்கனும்...இந்த ஒரு நாய் அல்ல..இன்னும் நூறு நாய் இந்தத் தெருவில வளர்ப்பேன்... என்னா செய்றிங்கலோ செய்யுங்க...என்று...மீசை முறுக்கி வீட்டுக்குள் சென்றார்... ...................யாரு செஞ்சாங்க என்று தெரியல..ஆனா பக்காவா செஞ்சு இருக்காங்க...பருப்பு கடையிற மத்துல சுற்றிலும் ஆணி அடிச்சு..நாய் வாய் திறக்கும் போது..அந்த மத்தை நாய் வாய்க்குள் சொருகிட்டாங்க.. ஆணியோட உருண்ட மத்தை கடித்த நாயால்..வெளியே எடுக்க முடியாம அந்த ஆணியவே கடித்து கடித்து...இரத்தம் ஒழுக...........தெருவில் இருப்பவர்கள் காதோடு காதாகப் பேசிக் கொண்டார்கள்.                  ........... இப்படி பட்டவர்களைப் பார்த்து இப்போது நாய்கள் துரத்தி வருகின்றன....                          நாய்களின் சத்தம் தேய்ந்து இ..ம்மா என்ற மாடு கத்தும் சத்தம் கேட்டது.மலையின் அடிவாரத்தில் இருந்த கீத்துக் கொட்டாயில் மாடுகளை அவிழ்த்து வெளியே மேச்சலுக்கு துரத்திக் கொண்டு இருந்தார்கள்.                              சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதத் துவக்கத்தில் .கோடை மழை ஒரு சில நாட்களாக பெய்து வருவதால்.. ஓட்டிப் போட்ட மலைச் சரிவில் ... முளை விட்ட பண்ணைக் கீரை..குமிட்டிக் கீரை இரண்டு இலை விட்டு தலை நிமிர்ந்து நிற்கும்.அதை இரண்டு விரலில் கிள்ளி எடுத்து மடியில் கட்டிய முந்தானைப் பையில் போட்டுக் கொண்டு இருந்த ..மலை அடிவாரத்து கிராமத்துப் பெண்கள்...மலை ஏறி வரும் தம்பி ரவியையும் என்னையும் நிமிர்ந்து பார்த்து... கீரைக் கிள்ள வந்தீங்களா  என்று..க்களுக் ... எனச் சிரித்தனர். மாடு விரட்டிய தாத்தா... சுறுக்கா போயிட்டு சுறுக்கா  வந்திடனும்  தம்பி.... மழை காத்துக் காலம்...அப்புறம் விஷ சுருட்டைகள் சுருண்டு கிடக்கும்...பாத்து நடங்க... அதோ..அந்த மூங்கில் தடியை கையில ஊன்றி நடங்க ...வித்தியாசமாக ஆளுங்கத் தெரிந்தால்...கீழே இறங்கிடுங்க..யாராச்சம்... சீட்டு ஆடுறப் பசங்களா... சாராயம் காச்சிற  ஆளுங்களா இருப்பாங்க...தாத்தாவின் அந்த  எச்சரிக்கை  எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. .......                                      தூர  இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரிந்த சுல்தான் மலை அடிவாரத்தில் இருந்து பார்க்கும் போது உயரமாக தெரிகிறது..சரி..வந்து விட்டோம்..மலை உச்சிக்கு செல்லாமல் வீடு திரும்புவதில்லை..என்று... மால்கோ...அலுமினியம் தயாரிக்கும் கம்பனிக்கு நீர் எடுக்கும் பும்ப் ஹவுஸ் செல்லும் மண் சாலையில்  இருந்து வலப்புறம் திரும்பி மலை மீது ஏறத் துவங்கினோம்.......பாதி மலை ஏறி கீழேத் திரும்பி பார்த்தால்...அடிவாரத்தில் இருந்த வீடுகள்..ஆட்டோ ரிக்க்ஷா அளவில் தெரிகின்றன .மலையின் கழுத்துப் பகுதியில் நுழையும் போது... கிழக்கில் இருந்து சிர் என்று காற்று காதில் ரீங்காரம் செய்து கீழேத் தள்ளுவது போல வீசியது.காற்றின் வேகத்தை மீறி மேலே எங்களால் ஏற முடிய வில்லை.நாங்கள் இருவரும் அப்படியே அமர்ந்துக் கொண்டோம்.. காற்றின் வேகம் சற்று குறைந்தப் பிறகு...எழுந்து நடந்தோம்... யாரும் நடந்த பழைய  வழி எதுவும் அங்கில்லை..நாங்கள் செல்லும் வழிதான்  புது வழி.                             வேறு வழியில்லை.                             சிறு சிறு கற்களும்...பெரிய பாறைகளும் .. முட்புதர்களும்...        அரப்பு மரங்களும். உன்னிச் செடிகளும்.. கருக்கட்டான் மரங்களும்...கிலுவை முட்களும் ...பெயர் தெரியாத செடிகளும் வளைந்து. . வளர்ந்து காற்றில் தலை ஆட்டின. ஓனான்கள்.. ஒடக்கான்கள்...பச்சோந்திகள் ஓடி பாறை மேல் ஏறி தலையை ஆட்டி ..சொட்டான் போட்டன.மலை உச்சி ஏறியப் போது..காற்றின் வேகம் சற்று குறைந்து இருந்தது.உச்சியில் சுமார்...நாற்பதுக்கு முப்பது அடி அளவில் தரை மட்டமாகவும்...உச்சியில் இருந்து கிழக்கே எட்டுக்கு ஆறு அடி அளவில் கரும் பாறைகளை உடைத்து போடப் பட்ட அகன்ற படிக் கட்டுகள் கீழ் அடிவாரம் வரைச் சென்றன.அதன் இருபுறமும் இரண்டடி அளவிலான  கற்கள்  மூன்று அடி உயரத்திற்கு கீழே படிக்கட்டு வரை அடுக்கப் பட்டு சுற்றுச் சுவர் போல இருந்தன ..உச்சியில் தெற்கே..மனித உடல் போன்ற கழுத்து வரை உள்ளப் பகுதியும்..அதன் மட்டமான தோள் பகுதியின் மேலே ..உருண்டையான மனிதத் தலைப் போன்ற பெரியப் பாறையும்..பார்பதற்கு மிகப் பெரிய உருவமாகத் தெரிந்தன.பிடித்துத் தள்ளினால் கீழே உருண்டு விழும்  போல இருந்த அந்த மனிதத்தலை பாறை ஒரு வீட்டின் அளவில் இருந்தது.இடுப்புக்கு மேலே உடம்பும்..அதன் மீது  உருண்டத் தலையும் பெரியப் பெரிய பாறைக களாக இருந்ததால்... இதைக் கீழே இருந்துப் பார்த்தால் .....ஒரு மனிதன் உட்கார்ந்துக் கொண்டு பார்ப்பதுப் போலவேத் தெரியும்..அதனால் இதை காந்தித்தலை  பாறை என்று அழைப்பார்கள். .......                           கிழக்கில் கீழே இறங்கும் பாறை படிகட்டுக்கும்...இந்த காந்தித் தலை பாறைக்கும் நடுவில்..குடியாத்தம் பாறைப் போல.....பெரிய கல்          இடுக்கின் உள்ளே ஒரு குகை தெரிந்தது.அதன் அருகில் சென்று எட்டிப் பார்த்தால்...குகைக்குள் ஆறு அடி அகல கல் படிக்கட்டு இறங்கிச் சென்றது.. முட் புதற்களும் செடிக் கொடிகளும் மண்டிக் கிடந்த அதன் உள்ளே  ஒரே இருட்டாக இருந்தது.குகைக்குள் உற்றுக் கவனித்த தம்பி ரவி....அண்ணா.. குகைக்குள்  இருந்து ஒரு விதமான சத்தம் வருது என்றார்.நானும் ஊன்றிக் கவனிக்கும் போது..ஒருவித ..இதுநாள் வரை கேட்டறியாத .. இம்...ம் இம் என்றச் சப்தம் நின்று ..நிதானமாக .. மெது மெதுவாக வந்துக் கொண்டு இருந்தது...அந்த குகையின் தோற்றமும்...இருட்டும்..பயமுறுத்தும் இந்த சத்தமும் .. வேறு யாருமில்லா  தனிமையும் எங்களை உண்மையாகவே நடுங்கச் செய்தன..   டவுசர் பாக்கட்டில்.. வீட்டில் இருந்து புறப்படும் போது ..நாங்கள் இருவரும் மறைத்து எடுத்து வந்த பேனா கத்தி இருக்கிறதா என்று..கையால் தடவி உறுதி படுத்திக் கொண்டோம்.        அங்கிருந்து நகர்ந்து மலை உச்சியில் இருந்து ..வானத்தைப் பார்த்தால் சூரியன் தலை உச்சியில் தெரிகிறான்.கொண்டு வந்து இருந்த  காரா பூந்தி..மிச்சரை சாப்பிட்டு வாட்டர் கேனில் மீதி இருந்த நீரைக் குடித்து முடித்தோம்.  .......                        காற்று மெதுவாகவும்..வேகமாகவும் விட்டு விட்டு வீச ஆரம்பித்தது.. கீழே சுர் என்று அடிக்கும் கத்தரி  வெய்யில் .. இங்கே மேலே சுகமாக குளு குளு என்று இருக்கிறது .                              இடது புறமும் வலது புறமும் உள்ள நீண்ட வளைந்த மலைகளின் நடுவே ஒய்யாரமாக ஓடிவரும் காவிரி நீர் ..மேட்டூர் அணை தடுப்பில் சுழன்று தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைப் போல சுகமாக  சுருண்டுக் கிடக்கிறது .. நீண்டு அகன்று விரிந்து கிடக்கும் அந்த நீரின் ஆக்கிரமிப்பு ..ஒரு கடல் போலத் தெரிகிறது ..அதில் எழும். அலைகளின் தொடர்ச்சி... சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும்.. மின்னும் வெள்ளித் தகடுகளாக...கண்ணை   கூசச் செய்கின்றன.தொடர்ந்து வரும் அலைகளின் ஓசை காற்றோடு கலந்து சோ...என்று ஒலிக்கிறது.      அலைகளின் மேலே எகிறி விழும் மீன்கள்...எண்ணில் அடங்காதவை.அதைப்                  பிடிக்கமுயலும் நாரைகள் ...கழுகுகள்.. வல்லூறுகள் அங்கும் இங்குமாக வட்ட மடித்துக் கொண்டு இருக்கின்றன .மேற்கே அணையும்..கிழக்கே தேங்கும் நீர் பரப்பும் ..வடக்கே மாதேஸ்வரன் மலைத்தொடரும்..தெற்கே..மால்கொ.. கெம்ப்லாஸ்ட்..மேட்டூர் கெமிக்கல்ஸ்.. பியர்ட்செல்.. மைக்கோ ஃபார்ம் போன்ற கம்பெனிகளின் உயர்ந்த புகைக் கூண்டுகளின் உச்சியிலிருந்து வெளியேறும் கரும்புகை சிறிய பீடி புகைப் போல.... சிறிய பொம்மைகள் போல  தெரிகின்றன .ஒரு உயரமான நீண்டக் குச்சியின் மீது நின்றுப் பார்ப்பதுப் போல சுற்றிலும் உள்ள இடங்கள் எங்களுக்குத் தெளிவாகத்  தெரிகின்றன.     .....     ஆற்றின் நீரில் கலந்து வரும் கோடைக் காலத்து காற்றின் குளுமையும்..எந்தவித ஆர்ப்பாட்டமும்  இரைச்சலும் இல்லாத அமைதியான சுழலும்... மனிதர்கள் .தெரு நாய்கள் இவர்கள் இல்லாத ஒரு அமைதியும் இந்த மலை உச்சியில் ..ஒரு புதிய வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன .         இங்கே....                             ஆனந்தம் உள்ளத்திற்கு ஆனந்தம் ..மகிழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி.....நெகிழ்ச்சி நினைவுக்கு நெகிழ்ச்சி..குளிர்ச்சி உடலுக்கு குளிர்ச்சி.தனிமை சிந்தைக்குத் தனிமை...அமைதி ஐம்புலனுக்கு அமைதி.  .....       கிடைக்கிறது.                               உயரமான இந்த மலை உச்சியில் நாங்கள் பெற்ற இந்த உன்னதமான அனுபவம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று.                            .....              நீல வானமும் ..மேகமும் ....வெளிச்சமும் .காற்றும்.. நீரும்....மலைத் தொடர்களும் ...பச்சை நிற மரங்களும் ...பறவைகளும் ....உயர்ந்த மலை உச்சியின் தனிமையும் ...அமைதியும்...இன்னும் பார்த்துக் கொண்டே...இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது.                                              பசி அதிகமானதால் ...கையில் கட்டி இருந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல்  HMT watch யைப் பார்த்தப் போது மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.      .......                                      கீழே இறங்க தீர்மானித்து கிழக்கே ஆற்றுப் பக்கம் இறங்க வழியைப் பார்த்தால்..பெரிய பெரிய பாறைகளும் கல் இடுக்குகளும் நிறைந்து காணப்பட்டன. ......ஏறி வந்த வழியே .. மண் சரிவும்..சிறு கற்களும்... வாட்டமும் இருந்ததால்.அதன் வழியே இறங்க ஆரம்பித்தோம் ...இறங்க இறங்க பசி அதிகமானதால்....அங்கே வளர்ந்து இருந்த கருக்கட்டான் மரத்தில் பழுத்து இருந்த பழங்களை சாப்பிட்டு பசி ஆற்றினோம்...இந்த கருகட்டான் பழம் தின்னும் அனுபவம் தம்பி ரவிக்கு ஒரு புதிய அனுபவம்..அந்தப்  பழம் இழந்தைப் பழம் போன்று இருக்கும்...சப்பி வெள்ளைச் சதையை உறுஞ்சி விதையை துப்ப வேண்டும் .நல்ல சுவையாக இருக்கும்.                                                            மலை இறங்கி வீட்டை நெருங்கும் போது மீண்டும் அந்தத் தெரு நாய்கள் எங்களைப் பார்த்து குரைக்க ஆரம்பித்து பின்னாடியே துரத்தி வந்தன.கையில் இருந்த  மூங்கில்  தடியை வைத்து அவைகளை சமாளித்தோம்..வனவாசி மலையில் மழை வருவதைப் பார்த்த எங்களால் வேகமாக நடக்க முடிய வில்லை..உள்ளம் தான் உற்சாகமாக இருந்ததேத் தவிர ..உடல் களைத்துப் போய் இருந்தது..வீட்டிற்குள் நுழைந்த போது நாங்கள் இருவரும் முழுக்க மழையில் நனைந்து விட்டோம்...........
அந்த மே மாதத்தில்..மூன்றாம் வாரத்தில் +2 விற்க்கு ரிசல்ட் வரும் என்று தம்பி ரவி சொல்லிக் கொண்டு இருந்தார் ...வீட்டிற்க்கு வந்த செல்வகுமார் அண்ணனிடம் ..எனக்கு ரயில்வேயில் இருந்து ..ட்ரெயின்  எக்ஸாமினர்..வேலைக்கு ஆர்டர் வந்துள்ளது ...நாளைக்கு சென்னை செல்கிறேன் என்றுச் சொன்னேன் .மிக சந்தோசம் என்று எனக்கு கை கொடுத்தார்.சற்று நேரம் தன்             தாடையை தடவியவர்... தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த கேமலின் இன்க் பேனாவை எடுத்து என் கையில் கொடுத்து என் வலது தோளை தட்டிக் கொடுத்தார்...அப்போது ...அப்பா.....அம்மா..தங்கைகள்...தம்பி ரவி.... நான்..  எங்களிடையே  ஒரு அர்த்தமான .... அமைதி   .நிலவியது......தம்பி வேலைக்கு சென்னை செல்கிறான்..இனி அடிக்கடி அவனை பார்க்க முடியாது என்று நினைத்தாரோ என்னவோ..செல்வஅண்ணனின் முகம் வாடிப் போனதை என்னால்...எங்களால் உணர முடிந்தது.                                                          அடுத்த நாள் ..நான் சென்னைக்கு புறப்பட்ட போது தம்பி ரவி....அந்த  லைஃப்பாய் சோப் போன்ற சிகப்பு நிற   டிக்ஸ்னெரியைப் படித்துக் கொண்டு இருந்தார் ...அண்ணா..இன்னும் ஒரு சில நாளில் எனக்கு +2 ரிசல்ட் வந்துவிடும்...நாளைக் காலை நானும் சேலம் செல்கிறேன் என்றார்...ம் சரி என்று நான் தலை ஆட்டியபோது...அண்ணா..இந்த பாக்கெட் டிக்ஸ்னரியை எடுத்துச் செல்கிறேன்..படிக்க வேண்டும் என்றார். என்னால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.அந்த ஒரு டிக்ஸ்னரி தான் வீட்டில் உள்ளது...தங்கைகள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.                         சென்னை சென்று ஒரு மாதத்தில் ..சென்னை சென்ட்ரலில் இருந்த ஹிக்கிம் பாதம்ஸ் புத்தகக் கடையில் ஒரு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி.. இங்கிலீஷ்..இங்கிலீஷ்..தமிழ்..வாங்கினேன். இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து மேட்டூர் வீட்டிற்க்கு வந்தப் போது ...அந்த லைஃப் பாய் சோப் வைக்கும் இடத்தில் ..அந்தச் சின்ன சிகப்பு நிற டிக்ஸ்னரியும் இருந்தது..தம்பி ரவி... இந்த           டிக்ஸ்னரியை எடுத்துச் செல்வதாகச் சொன்னாரே..எடுத்துச் செல்ல வில்லையா என்றுக் கேட்டேன்....இல்லை..இந்த டிக்ஸ்னரி யை முழுதுமாக படித்து விட்டு..ரவி அண்ணா..அதை அங்கேயே வைத்து விட்டுச் சென்று விட்டார் என்று தங்கை அல்லி.... வேணி சொன்னது.     தம்பி கேட்டப் போது ..சரி என்று சொல்லி இருக்கலாம்..இப்போது புதிய ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி கையில் ...நாம் எதுவும் பதில் சொல்லாததால்...தம்பி ரவி ..அந்த சோப்பு அளவில் இருந்த டிக்ஸ்னரி யை எடுத்துச் செல்ல வில்லை.. அடடா...கொடுத்து இருக்கலாமே....மனம் வலித்தது...அன்று நெஞ்சில் குத்திய அந்த முள்ளின் வலி இன்றும் தொடர்கிறது ....23.05.2025.................        "சேலம் வசந்த் "

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.