கன்னத்தில் அறை
இப்பொழுதும் ...என் இடது கன்னத்தை தடவும் போது பளார்... என ஓர் அறை விழுவது போல ஓர் வலி... ஓர் உணர்வு தோன்றுகிறது. அந்த வலியின் தாக்கம் நாற்பத்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்னும் நினைவில் பதிந்து உள்ளது. என்னை அடித்தவர்... திரு. ஆர்ஶ்ரீ....அதாவது ஆர்.ஶ்ரீதரன்... MSc...maths... என் முதல் செமஸ்டர் maths lecturer... எனக்கு மட்டுமா கன்னத்தில் அறை....வகுப்பில் உள்ள நாற்பது பேரில் முப்பது மாணவர்களுக்கு மேல்... கன்னத்தில் அறை...முதுகில் குத்து..இடுப்பில் கில்லு. ..அடிமட்டுமல்ல ...முகத்தை நோக்கி தூக்கி எறிந்த நீண்ட வெள்ளைக் கணக்கு நோட்டு...காற்றை கிழித்துக் கொண்டு மேல் மாடியில் இருந்து கீழே பறந்து போய் கிழிந்து விழுந்தது. . ...