Posts

Showing posts from March, 2025

கன்னத்தில் அறை

இப்பொழுதும் ...என் இடது கன்னத்தை தடவும் போது பளார்... என ஓர் அறை விழுவது போல ஓர் வலி... ஓர் உணர்வு தோன்றுகிறது.    அந்த வலியின் தாக்கம் நாற்பத்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்னும் நினைவில் பதிந்து உள்ளது.                                           என்னை அடித்தவர்...                         திரு. ஆர்ஶ்ரீ....அதாவது ஆர்.ஶ்ரீதரன்... MSc...maths... என் முதல் செமஸ்டர் maths lecturer... எனக்கு மட்டுமா கன்னத்தில் அறை....வகுப்பில் உள்ள நாற்பது பேரில் முப்பது மாணவர்களுக்கு மேல்... கன்னத்தில் அறை...முதுகில் குத்து..இடுப்பில் கில்லு. ..அடிமட்டுமல்ல ...முகத்தை நோக்கி  தூக்கி எறிந்த நீண்ட வெள்ளைக் கணக்கு                               நோட்டு...காற்றை கிழித்துக் கொண்டு மேல் மாடியில் இருந்து கீழே பறந்து போய் கிழிந்து விழுந்தது. .    ...

படிப்பும் பயணமும்

மேட்டூர் அணை... VHS பள்ளியில் பதினோராம் வகுப்பு வரைப் படித்தப் போது .. பாதிநேரம் படிப்பு ...மீதிநேரம் விளையாட்டு என்று  காலந்தள்ளியப் பிறகு .. மேற்க்கொண்டு படிக்க...மிதக்கும் எண்ணங்களோடு... மே மாத இறுதியில்......1978 யில் திருச்சி அரியமங்கலம்.  . Sashasayee institute of Technology/.SIT யின் மெயின் gate முன்பாக இரவு ஏழு மணிக்கு நானும் அப்பாவும் திருவெறும்பூர் செல்லும் பஸ்சில் இருந்து இறங்கினோம்.                   அந்த கேட் முன்பாக... நல்ல உயரத்தில் ...சிவப்பு நிறத்தில்...இடுப்பில் பஞ்சகச்சம் ..உடம்பில் கோட் ..சூட்...   காலில் ஷு ..தலையில் முண்டாசு.... முன் நெற்றியில்... புருவத்தில் இருந்து நெற்றி வரை நீண்ட நாமம்..கொண்ட ஒருவர் நின்று இருந்தார்.அவரின் வலதும் இடமுமாக இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்....        அவரைப் பார்த்துத் தயங்கிய... என் தந்தையாரைப் பார்த்த அவர் .. எங்கே இருந்து வறிங்க... என்றுக் கேட்டார். அப்பா...மேட்டூர் அணை கெமிக்கல்ஸ் யில் இருந்து..என்றுச் சொன்னப் போது...      ...

பட்டாம் பூச்சி

2012 ம் வருடம்.... சேலம் கோட்டம்.  Railway divisional ஆபீஸில் .... பணியாற்றிய போது..AC குளிரில் coumputer ரையே பார்த்துக் கொண்டு இருப்பது. . வெறுப்பாக இருக்கும்... இதனிடம் இருந்து விடுபட..... மெயின் gate க்கு வெளியே வந்து....ஸ்டீல் plant செல்லும்  பாலத்தின் கான்கிரீட் கைப் பிடிச் சுவரில் சாய்ந்து ...மேலே குடை போல விரிந்து கிடக்கும் மரக் கிளைகளின் நிழலில் நின்று..... வேக வேகமாக விரைந்துச் செல்லும்....          வாகனங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும்....ஒரு நல்ல புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.....           இப்படி ஒரு நாள்.... நின்றுக் கொண்டு சென்செஸ் எடுக்கும் போது .... டக் என்று கண்ணில் பட்டார்...சீனு....சீனிவாசன்....உடனே. ..நான் சீனு... சீனு... யென்று கூப்பிட்டால்.... வேக வேகமாக.... பெடலை அழுத்திக் கொண்டு. ..பாலத்தின் மீது சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கிறார் .. என் கூப்பாடு சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்ற ஒரு bike காரர்.... சீனுவிடம்...உங்களை.... அவர் கூப்பிடுகிறார் என்று சொல்லி விட்டுச் சென்றார்.... சைக்கிளை இடது ...

யார் அவர்

20.12.2024 வெள்ளிக் கிழமை அன்று... பழையப் ஃபோட்டோ க்களை...பார்த்துக் கொண்டிருந்த போது...1947 ஆம் வருடம் August மாதம் 15 ஆம் தேதியில் லடாக்கில் ... பனி சிகரத்தில் MEG...Madras engineering group பிரிவில் ... பிரிட்டிஷ் rule ல்.....military யில் பணியாற்றிய போது....சுதந்திரம் கிடைத்து விட்டது என்றச்...செய்தியை அறிந்ததும்..... இமைய மலை மேலே....வானத்துக்கும் மேலே.. மேலே .. உயர்ந்துப் பறப்பதுப் போல....உன்னத உற்சாகத்தில்....இந்திய முவர்ணக் கொடியை நெஞ்சில் அனைத்து பிடித்துக் கொண்டு... ஜெய்ஹிந்த் ... ஜெய்ஹிந்த்....என்று உரக்கச் கத்திக் கொண்டு....அந்த லடாக் மலைச் சரிவில்....தன் சக இராணுவ வீரர்களோடு....ஓடிய ..பதினெட்டுப் வயது இராணுவ வீரர் ....என் தந்தையின் ஃபோட்டோவைப் பார்க்க நேர்ந்தது...                                                                         என் தந்தை...அந்த காலத்து தேர்டு ஃபார்ம் படித்தவர்...பள்ளிய...

நெஞ்சார்ந்த நன்றி

நேற்றைய தினம் 06.03.2025 அன்று... பிறந்த இடம்...அதன் அறிவிப்பு செய்த காவி சாமியார்..பெயர் வைத்த காரணம்...பெற்றோரின் வேண்டுதல்... நிறைவேறிய விதம்... காவியின் ஒரே தரிசனம்...நாள்...கிழமை...மாதம் ..என்று.... என் பிறந்த நாள் மார்ச் மாதம் 06ஆம் தேதி என்று பதிவிட்டு இருந்தேன் ..                                                  """""நேற்று என் பிறந்த நாளில் வாழ்த்துகளோடு ஆசிர்வதித்த அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி """

காவி சாமியார்

 இந்தியாவின் வடக்கு தேசத்தில்... military quarters ல்... என் குடும்பத்தார் வசித்தப் பொழுது ... இடுப்பு வரை வளர்ந்த சடா முடியுடன்... நீண்ட வெண் தாடியுடன் ...காவி நிறம் கொண்ட ஒற்றை ஆடையுடன்.....  வயதான நெடிய உயரம் கொண்ட ஓர் இந்து சாமியார்  ... "ஓம் நமச்சிவாய "....என்று வீட்டு வாசலில் நின்று யாசகம்.. ..கேட்டப் பொழுது.... என் தாய் நிறை மாத கர்ப்பிணி..              என் தந்தை duty க்கு செல்கிற பொழுது ...தனக்கு துணையாக இருக்கும் ஹிந்தி தெரிந்த பக்கத்து வீட்டு தெலுங்குப்  பெண்ணுடன் வெளியே வந்து ..என் தாய்..அந்த சாமியாருக்கு தர்மம் செய்த பொழுது. ...அந்த காவி சாது ..அதை வாங்கவில்லை ..மறுத்துவிட்டார்....பதிலாக . . வருகிற பவுர்ணமி அன்று வெள்ளிக் கிழமை உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்.., அதற்கு.  ...                           ,"வஸந்த...ராம்" என்று பெயர் வை.... என்றாராம் .. மகிழ்ந்த என் தாய் ... அதற்கு என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு என்று ... பக்கத்தில் இருந்த ஹிந்தி தெரிந்த அ...