நொறுக்குத்தீனி
அப்படி கெட்டியான சோன் பப்டி சாப்பிட்ட ஓர் அனுபவம்...ஒரு நாள் மாலை நேரம்...பெங்களூரு சந்திப்பில் இருந்து....மெஜஸ்டிக் பேருந்து நிலையம் செல்லும் மேல் பாலம் மீது மெதுவாக சென்று... எதிரே இருக்கும் கடை வீதியில்... மூலையில்...முன் இருக்கும் கரும்புச் சாறு விற்க்கும் கடையில்.. நாங்கள் விரும்பும் வகையில் ... ஒரு டம்ளர் ...ஐஸ் கலக்காத...கரும்புச் சாறு டோக்கன் பெற்று... வரிசையில் நின்று வாங்கிக் குடித்து விட்டு.. மீண்டும் பெங்களூரு சந்திப்பு இடது புறம் இருக்கும்... தங்குமிடத்திற்க்கு திரும்புவது அன்றாட வழக்கம் ...அப்படி வரும் போது....நண்பர் மாதவன் ... கோவையை சேர்ந்தவர்...எதிரே தள்ளு வண்டியில் விற்ற சோன்பப்டி வாங்கி என்னையும் சாப்பிடச் சொன்னார்...இப்பொழுதுதான்...இஞ்சி .. எலுமிச்சை கலந்த கரும்பு சாறு உதடு ஒட்ட க்குடித்து ..அதன் இனிப்பு இன்னும் வாயில் தித்தித்துக் கொண்டு இருக்கும் போது....இன்னொரு இனிப்பு. .எதற்கு... எனக்கு சோன்பப்டி சாப்பிட ஆர்வம் இல்லை ..அதனால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவர் எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு சோன்பப்டி பாக்கெட்டுகளை பிரித்து....வாயில் கொட்டும் போது....அந்த மாலை நேர மயக்கத்தில்.... மெஜஸ்டிக் பேருந்து நிலைய மேல் பாலத்தில். இரண்டு புறமும் நின்று கொண்டு... வருவோரையும்.. போவோரையும்..ஆச்சரியப் பட வைக்கும்...பெண்களையே மயங்கச் செய்யும். ....வண்ண வண்ண . உடல் அமைப்பில்....பார்த்துப் பார்த்து சிரிக்கும்....அந்த அழகு தேவதைகளில்...ஒருவர் ஓடி வந்து ...மாதவன் வாயில் கொட்டப்போன.... அந்த... சோன் பப்டியை....பிடுங்கி.. தன்....வாயில் கொட்டிக் கொண்டு மீதியை...மாதவனின் வாயில் கொட்டித் திணித்து... சாப்பிடுங்க.... (uncle ) என்று... சொல்லி விட்டு... தன் இருப்பிடம் நகர்ந்தார்.. சிரித்துக் கொண்டே...அந்த மெஜஸ்டிக் மேம் பாலத்தில் நடக்கும் போதெல்லாம்.... நாங்கள்...அந்த தேவதை களைப்....பார்த்து.. ரசித்துக் கொண்டும்....பயந்து கொண்டும் தான் நடப்போம்...அந்த தேவதைகள். ஏதாவது....எதையாவது செய்வார்கள் என்று... எதிர் பார்த்தது .. நடந்தே விட்டது...மாதவனின்...மூக்கு....கன்னம்... உதடு...காது...கழுத்து..சட்டை கால ர்.ஆகியவை...எல்லாம்.. ...கெட்டியாக ஒட்டிக் கொண்டது சோன்பப்டி..அந்த தேவதை...வெடுக்கென்று பிடுங்கி. வாயில் அழுத்திக் கொட்டி மீதியைக் அவர் வாயில் கொட்டியதால்.. அந்த...ஒரு சில வினாடி நேரத்தில்...அவசரம்.....அடாவடி.... அதிர்ச்சி யான... தருணத்தில்.... வாயில் நுழைத்த சோன் பப்டியை. அப்படியே... .. வாய்க்குள் அழுத்தி.... விழுங்கி விட்டார்..மாதவன்.. மிக அதிர்ச்சியோடு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் எங்களை .. அந்த மேம் பாலத்தில் வேக வேகமாக... விரைந்து செல்லும் வேற்று கிரக வாசிகள் போல...செல்லும் அந்த மனித.....மேதாவிகள்....இந்த நிகழ்ச்சியை...யாரும்கண்டு கொள்ளவில்லை..... இருப்பிடம் வந்த பிறகு....மாதவன்.... ரூம் பக்கத்தில் இருந்த வாஷ் பேசின் சென்று...வாயில் இருந்ததை துப்பினார்....சோன் பப்டியுடன்....சிகப்பாக இரத்தம் கலந்து வந்தது...தண்ணீரில் வாய் கலந்து துப்பினார் .இரத்தம் கலந்து வந்தது...ரூமில் உள்ள நாங்கள்...பயந்து போய் விட்டோம் ..எண்ணம் எங்கெங்கோ சென்று விட்டது.... மொபைல் டார்ச் அடித்து...வாயைத் திறந்து பார்க்கும் போது...தொண்டையில் ..மேல்புறம் சிறு நாக்கிற்கு...முன் மேல் அன்னத்தில். ஊசி போன்ற உடைந்த ..சோன்பப்டி குத்திக் கொண்டு இருந்தது...அதில் இருந்துதான்...இரத்தம் கசிந்து கொண்டிருந்தது... என்ன செய்ய.... பால் point பேனாவின் நுனி கொண்டு... அந்த உடைந்த.. குத்திக் கொண்டு இருந்த துகளை ஆட்டி எடுத்து.... விடுவித்தோம். ..மறுபடி. நீர் சேர்த்து. துப்பிய போது. இரத்தம் கலந்த சிகப்பு நீர் வரவில்லை..இதன் மூலம் ஒரு நல்ல பாடம்...சோன்பப்டி....அப்பளம்.... குச்சிக் கிழங்கு சிப்ஸ்... உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியன....சாப்பிடுவதில்... மிகக் கவனம் தேவை. குறிப்பாக சிறுவர்கள்...கவனமாக.... கொஞ்சம் கொஞ்சமாக கடித்து மென்று தின்று விழுங்க வேண்டும்.......அப்பாடி...இது போன்ற... நொறுக்குத் தீனி சாப்பிடும் அனுபவங்கள்....இருக்கே .. சிரிப்புத் தான் வருது.. " சேலம் வசந்த்"
Comments
Post a Comment