Posts

Showing posts from April, 2025

ராகம்

திறமையின் வெளிப்பாடு அதன் உச்சம் தொடும்போது தான் தெரியும்..                                 திறமையின் வெளிப்பாடு..தொடர் முயற்சியினால் ...பயிற்சியினால் வெற்றி பெருகிறதா என்றால்...அது இயற்கைத் தந்த வரம் என்றேச் சொல்லலாம்..                                   அப்படி ஆளுமை கொள்ளும் திறமை அவரின் வாரிசுகளுக்கும் வரும் என்று உறுதி படுத்த முடியாது.                        அரசாங்கப் பதவி என்றாலும் .. அறிவியல் துறை என்றாலும்...வணிகத் துறை என்றாலும்..விளையாட்டுத் துறை என்றாலும்... விவசாயம் என்றாலும்.. விண் ஆராய்ச்சி என்றாலும்... சினிமாத் துறை என்றாலும் . இவைகளில் உச்சம் தொட்டவர்களின் வாரிசுகள்....அந்த அளவுக்கு வெற்றிப் பெற முடியவில்லை...    ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் அந்த வாரிசுகளால் தொடர்ந்து வெற்றி பெற முடிவதில்லை..மெல்ல மெல்ல மங்கிப் போய் விடுகி...

மனதில் கனம்

புரட்டாசி மாதம்... புருஷோத்தமன் பெயர் ஒலிக்கும் மாதம்... புலால் உணவு தவிர்த்து...புடலங்காய்...பூசணிக்காய்...வெண்டைக்காய்... வாழைக்காய்... முள்ளங்கி... முருங்கைக்காய் .. என சைவ உணவுக்கு சரியான மாதம்... அசைவத்தை சைவமாகப் புரட்டிப் போடும்  மாதம்.  இந்தப் புரட்டாசியில்..    அருகில் இருக்கும் உழவர் சந்தைக்கு சென்று இருந்தேன்.தேவையான காய்கறிகளை வாங்கி கட்டைப் பைகளில் திணித்தால்...கைகள்     கனம் கொள்கின்றன....பாக்கட்டில் உள்ள பர்ஸில் கை வைத்தால் பணம்குறைந்து போகின்றன ... ஐநூறு  ரூபாய் நோட்டை வெளியே  விட்டால்.. ஐந்து ரூபாய் கூட மீதம் வருவதில்லை... விலை வாசி .. விண்ணைத் தொட்டு வேஷம் போட்டு ஆடுகிறது ...வாங்குவதை வாங்கி ....இரண்டு கைகளில் கனக்கும் பைகளை தூக்கிக் கொண்டு...சந்தை விட்டு வெளிவந்து.. நிறுத்தி விட்டு வந்த  டூ வீலர் நோக்கி நடக்கும் போது...எனக்குப் பின்னால் இருந்து என்னைக் கூப்பிடுவதுப் போல இருந்தது...நடக்கும் வேகத்தைக் குறைத்து  கவனித்தால்....என் பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள்... நின்று திரும்பிப் பார்க்கையில்....எழுந்து வரும் உதயனி...